லண்டனில் சாதனை படைத்த இந்திய பணக்காரர்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருபவர் லஷ்மி மிட்டல்.

இந்திய தொழில் அதிபரான இவர் உலக பணக்காரர் வரிசையில் 4-வது இடம் பிடித்தவர் என்பது விசேஷம்.

லண்டனில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் சென்சிங்டன் கார்டன் பகுதியில் லஷ்மிமிட்டல் ஏற்கனவே 2 பெரிய சொத்துக்களை வாங்கினார். இதன் மதிப்பு 27மில்லியன் பவுன்ட்ஸ் ஆகும்.

தற்போது லஷ்மிமிட்டல் தனது மகன் ஆதித்யாவுக்காக அதே பகுதியில் 16 ஆயிரத்து 250 சதுரஅடியில் ஒரு இடம் வாங்கினார்.

அதன்மதிப்பு 117 மில்லியன் பவுன்ட்ஸ் ஆகும்.

இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் தெருவில் 3 பெரிய சொத்து வாங்கியவர் என்ற பெருமையை லஷ்மிமிட்டல் பெற்றுள்ளார்.

No comments: