பிஸாரி என்றழைக்கப்படும் பறவையின டைனோஸரின் எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி டைனோஸரானது தற்போதைய பறவைகள் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். 4 நாடா உருவுடைய வால் பகுதி இறக்கையுடன் பறவையையொத்ததாக காணப்படும் இந்த டைனோஸர்களிடம்,
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பறக்கும் டைனோஸர்களில் காணப்படுவது போன்ற பறப்பதற்கான எதுவித அம்சங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
"எபிடெஸிப்ரெரிக்ஸ்" என்ற விஞ்ஞானப் பெயருடைய மேற்படி டைனோஸர், தொடர்பான விபரங்கள் "நேச்சர்" விஞ்ஞான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பானது தற்போதைய பறவைகள் தோற்றம் பெற்றதற்கு முன்னரான கூர்ப்பு மாற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்ய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஆய்வானது சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த புசெங் ஷாங் மற்றும் ஸிங்ஸு ஆகிய துறைசார் நிபுணர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. சீனாவில் லெய் யொனிங் மாகாணத்தில் மேற்படி புதிய பறவையின டைனோஸர் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்திலிருந்து உலகிலேயே மிகப் பழைமையான "ஆர்செயியோப்தெரிக்ஸ்' என்ற பறக்கும் ஆற்றலுள்ள பறவையின டைனோஸரின் எச்சங்கள், ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்த டைனோஸர் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பிஸாரி எனப் பெயரிடப்பட்டுள்ள பறக்கும் ஆற்றலற்ற இந்த புதிய வகை டைனோஸரானது, மேற்படி "ஆர்செயியோப்தெரிக்ஸ்' டைனோஸர் வாழ்ந்த காலத்தை விட முற்பட்ட காலத்தில் வாழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டைனோஸரின் எச்சங்களில் 152 மில்லியன் முதல் 168 மில்லியன் வரையான ஆண்டுகளுக்கு முற்பட்ட ரேடியோ காபன் கூறுகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
சூரியத் தொகுதி எல்லை ஆய்வுக்கான முதலாவது விண்கலம் வெற்றிகரமாக பயணம்
நாசாவின் "ஐ.பி.ஈ.எக்ஸ்' விண்கலமானது பசுபிக் சமுத்திரத்திலுள்ள கவாஜலெயின் அதேரஓல் எனும் இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.47 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்படி விண்கலமானது சூரியத் தொகுதியின் எல்லைக்கு அப்பால் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பான தரவுகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிக்காக விண்கலமொன்று ஏவப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
"ஐ.பி.ஈ.எக்ஸ்' என்பது, நட்சத்திரங்களுக்கிடையிலான எல்லை ஆய்வு சாதனம் என்பதன் சுருக்கப் பெயராகும். நட்சத்திரங்களுக்கிடையிலான எல்லையில் நிலவும் குளிர்மையான வாயுக்கள் தொடர்பில் இந்த சாதனம் ஆய்வு செய்யவுள்ளது. மேற்படி விண்கலமானது பிற்பகல் 1.53 மணியளவில் அதனை ஏவப்பயன்பட்ட பெகாஸஸ் ஏவுகணையிலிருந்து தனிப்படுத்தப்பட்டு, தனது சுய உபகரணமுறைக் கட்டுப்பாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
45 நாள் பரிசோதனைக் காலக் கட்டத்தின் பிற்பாடு, தனது இரு வருட கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்படி விண்கலம் ஆரம்பிக்கும் என கிறீன்பெல்ட்டிலுள்ள நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் பிளைட் நிலையத்தின் முகாமையாளர் கிரெக் பிரெஸியர் தெரிவித்தார். மேற்படி விண்கலமானது சக்தியேற்றம் பெற்ற உயர்வேக அணுத்துணிக்கைகளின் விளைவுகளை அடிப்படையாக வைத்து, சூரியத்தொகுதிக்கு அப்பாலுள்ள நிலைமை தொடர்பான பிரதிமை ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த பிரதிமையானது நுண்ணிய எண்ணற்ற வண்ணப்புள்ளிகளால் உருவாக்கப்படவுள்ளது.
சூரியனிலிருந்து அனைத்து திசைகளிலும் மணிக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசிய சூரியப் புயலொன்றையடுத்தே, இந்த சூரியத் தொகுதி எல்லைப் பகுதி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சூரியத் தொகுதி எல்லைப் பகுதியிலிருந்து அபாயமிக்க பிரபஞ்சக் கதிர்கள் பூமியை சுற்றியுள்ள விண்வெளியைத் தாக்கக் கூடிய வாய்ப்புள்ளதால் இது தொடர்பான ஆய்வு அவசியம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
""இந்த ஆய்வின் முடிவில் ஆச்சரியமொன்று காத்திருக்கிறது என்பதை எம்மால் அறிய முடிகிறது'' என "ஐ.பி.ஈ,எக்ஸ்' விண்கலத்தின் பிரதான ஆய்வாளர் டேவிட் மக்கொமஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் நிலவு நோக்கிய கனவு
இந்தியா நிலவை ஆராய்வதற்காக 'சந்திராயன்' என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அக்டோபர் 22 ஆம் தேதி அனுப்ப உள்ளது. இந்த விண்கலத்தில் ஆறு இந்திய உபகரணங்களும், அமெரிக்க உபகரணங்கள் இரண்டு உட்பட, ஆறு வெளிநாட்டு உபகரணங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு, உயர் தொழில்நுட்பத் துறைகளில் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. சில விடயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைத்தாலும், வேறு சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன.
இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த பல அமைப்புகளை தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்த முரண்பட்ட உறவுகள் குறித்தும் ஆசியாவில் சீனாவும், ஜப்பானும் விண்வெளித் துறையில் கண்டு வரும் வெற்றிகள் காரணமாக இந்தியா நிலவுக்கு விண்கலனை செலுத்துகிறதா என்பது குறித்தும் இன்றைய பகுதி ஆராய்கிறது.
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வாயில்...
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வாய்க் கிரகத்திற்கு மிகப் பெரிய விண்கல உபகரணமொன்றை அனுப்பத் உத்தேசித்துள்ளது. 1.8 பில்லியன் செலவான இந்த பாரிய ஆராய்ச்சி கூடத்துடன் சிறிய வட்டவடிவ ரோபோக்களையும் அக்கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொன்றும் 11 இறாத்தல் எடையுடைய இந்த பந்து வடிவ ரொபோக்களானது, சுமார் 62 மைல்களுக்கு உருண்டு சென்று பல்வேறு கோணங்களிலும் செவ்வாய்க்கிரகத்தைப் படம் பிடிக்கவுள்ளதுடன் செவ்வாயின் மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி ரோபோவின் மேற்பரப்பில் உள்ள சூரிய சக்திப் பிறப்பாக்கிகள் மூலம் அதன் இயக்கத்திற்கு தேவையான சக்தி பெறப்படவுள்ளது. இந்த பந்து வடிவமான ரேபோக்களானது சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் போலன்றி செவ்வாயின் மேற்பரப்பில் தங்கு தடையின்றி அசைந்து திரிவதுடன் தூசு துணிக்கைகளின் பாதிப்புகளுக்கும் இலகுவில் உள்ளம்காத தன்மையைக் கொண்டிருக்கும் என நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிறை குறைந்த கதிர்ப்புகளால் தாக்கப்படாத கணனி செயற்பாட்டைக் கொண்ட இந்த ரோபோக்களில் நான்கை 6 மில்லியன் அமெரிக்க டொலரிலும் குறைந்த செலவில் உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொன்றும் 11 இறாத்தல் எடையுடைய இந்த பந்து வடிவ ரொபோக்களானது, சுமார் 62 மைல்களுக்கு உருண்டு சென்று பல்வேறு கோணங்களிலும் செவ்வாய்க்கிரகத்தைப் படம் பிடிக்கவுள்ளதுடன் செவ்வாயின் மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி ரோபோவின் மேற்பரப்பில் உள்ள சூரிய சக்திப் பிறப்பாக்கிகள் மூலம் அதன் இயக்கத்திற்கு தேவையான சக்தி பெறப்படவுள்ளது. இந்த பந்து வடிவமான ரேபோக்களானது சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் போலன்றி செவ்வாயின் மேற்பரப்பில் தங்கு தடையின்றி அசைந்து திரிவதுடன் தூசு துணிக்கைகளின் பாதிப்புகளுக்கும் இலகுவில் உள்ளம்காத தன்மையைக் கொண்டிருக்கும் என நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிறை குறைந்த கதிர்ப்புகளால் தாக்கப்படாத கணனி செயற்பாட்டைக் கொண்ட இந்த ரோபோக்களில் நான்கை 6 மில்லியன் அமெரிக்க டொலரிலும் குறைந்த செலவில் உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
9000 வருடங்களுக்கு முற்பட்ட மனித எச்சங்கள்
இஸ்ரேலிய கடற்கரைக்கு அப்பால் மீட்கப்பட்ட 9000 வருடங்கள் பழைமையான தாயொருவரதும் அவரது குழந்தையினதும் எச்சங்களிலிருந்து, அவர்களுக்கு காசநோய் பாதிப்பு இருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹபியா எனும் அண்மையிலிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய பண்டைய நியோலிதிக் கிராமமான அலிட்யாமிலிருந்தே இந்த தாயினதும் குழந்தையினதும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
500,000 வருடங்களுக்கு முன்பே காசநோய் இருந்ததாக வேறு சில ஆராய்ச்சியாளர்கள் உரிமை கோரி வருகின்ற போதும், அது தொடர்பான உறுதியான ஆதாரம் மேற்படி இஸ்ரேலிய எச்சங்களில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஹபியா எனும் அண்மையிலிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய பண்டைய நியோலிதிக் கிராமமான அலிட்யாமிலிருந்தே இந்த தாயினதும் குழந்தையினதும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
500,000 வருடங்களுக்கு முன்பே காசநோய் இருந்ததாக வேறு சில ஆராய்ச்சியாளர்கள் உரிமை கோரி வருகின்ற போதும், அது தொடர்பான உறுதியான ஆதாரம் மேற்படி இஸ்ரேலிய எச்சங்களில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது
இணையத்தளங்களை உபயோகிப்பதானது நடுத்தர வயதுடையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மூளையின் திறன் பலமடைய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தீர்மானமெடுத்தல், குழப்பநிலைகளுக்கான காரணத்தை பகுத்தாராய்தல் என்பனவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் மையங்கள், இணையத்தள தேடுதலின்போது ஒழுங்கமைக்கப்படுவதாக மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், வயதாதலுடன் தொடர்புடைய மனோவியல் மாற்றங்களை தடுக்கவும் இணையத்தள தேடுதல் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மனோவியல் மருத்துவ வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.
மூளை வயதாவதன் காரணமாக அதன் கலங்களின் செயற்பாடுகளிலான குறைபாடு உள்ளடங்கலான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறுக்கெழுத்து புதிர்கள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயற்பாட்டு திறனை ஊக்குவிக்க முடியும் என முன்னர் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு இணையத்தள பயன்பாடும் கணிசமான அளவில் உதவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காரி ஸ்மோல் விபரிக்கையில், ""இணையத்தள தேடலானது மூளையின் சிக்கல்மிகு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மூளையின் தொழிற்பாட்டை விருத்தி செய்கிறது'' என்று கூறினார்
விண்வெளிக்கு மின்தூக்கியில் பயணிக்கும் திட்டம் 2030 களுக்குள் பூர்த்தி செய்யப்படும்
பூமியிலுள்ளவர்கள் விண்வெளிக்கு சுலபமாக செல்வதற்கு உதவும் வகையில் மின் தூக்கியை வடிவமைப்பதில் 100 க்கு மேற்பட்ட பொறியியலாளர்களைக் கொண்ட ஜப்பானிய குழுவொன்று மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதியுயர் விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்படி மின்தூக்கியை அமைப்பது தொடர்பான திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
பூமி மேற்பரப்பில் அடித்தளத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின்தூக்கி, விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் வரை ஊடுருவிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மின் தூக்கியுடன் இணைத்து அமைக்கப்படும் பாரந்தாங்கியானது அதனது சமநிலையைப் பேணும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மின்தூக்கி மூலம் விண்வெளியிலுள்ள செய்மதிகளை இலகுவாக சென்றடைய முடியும் என தெரிவிக்கும் பொறியியல் நிபுணர்கள், மின் தூக்கியின் செயற்பாட்டுக்கு தேவையான சக்தியை, அணுசக்தி கழிவுகளிலிருந்து பெறுவது தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளனர்.
மேலும் இந்த மின் தூக்கிகளில் சூரிய சக்திப் பிறப்பாக்கிகளை ஸ்தாபித்து அதன் மூலம் சக்தியை பிறப்பிக்கும் பிறிதொரு திட்டமும் பொறியியலாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரபல விஞ்ஞான எழுத்தாளர் ஆதர் சி கிளார்க்கால் 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "த பவுண்டெய்ன்ஸ் ஒப் பரடைஸ்' என்ற நாவலில் இந்த விண்வெளிக்கான மின்தூக்கி தொடர்பான திட்டமொன்று விபரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அமெரிக்காவில் லிப்ட்போர்ட் குழுமத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் விண்வெளிக்கான மின் தூக்கியை வடிவமைக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். விண்வெளிக்கான மின்தூக்கியை வெற்றிகரமாக வடிவமைப்பதற்கு ஊக்குவிக்கும் முகமாக, அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் "4 மில்லியன் டொலர் விண்வெளி மின்தூக்கி சவால்' போட்டியை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் மேற்படி விண்வெளிக்கான மின் தூக்கியை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள "ஜப்பான் ஸ்பேஸ் எலவேட்டர்' சங்கத்தின் பேச்சாளரான அகிரா துஸுசிடா விபரிக்கையில், தமது நிறுவனமான அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் "ஸ்பேஸ்வார்ட் பவுண்டேஷன்' மற்றும் லக்ஸம்பேர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐரோப்பிய நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விண்வெளி மின் தூக்கியை மேலெடுத்துச் செல்வதற்கு காபன் நுண்குழாய்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், விண்வெளிக்கான மின்தூக்கி இலட்சியமானது 2020 களிலோ அல்லது 2030 களிலோ உரிய இலக்கை எட்டி விடும் என்று கூறினார். மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கலரஓபாகொஸ் தீவுகளே இந்த மின் தூக்கிகளுக்கான தளமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பிக் பேங் சோதனையில் சிக்கல்!
பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 'பிங் பேங்' சோதனை இயந்திரத்தில் பெருமளவில் ஹீலியம் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோதனையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.
சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய அணு சக்தி மோதலில்தான் பிரபஞ்சம் தோன்றியது என்ற பிக் பேங் (பெரு வெடிப்பு) கோட்பாடே இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. பூமி உருவாகி உயிர்கள் தோன்றவும் இதுவே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான அணு சக்தி மோதலை தற்போது உருவாக்கி, அதன்மூலம் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டறிய 36 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ ஆழத்தில் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவில் 'பிங் பேங்' சோதனை மையத்தை அமைத்துள்ளனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவக் குழாயின் இரு புறங்களில் இருந்தும் புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க உள்ளனர்.
திரவ ஹீலியம் வாயுக் கசிவு!
புரோட்டான்கள் மோதும்போது ஏற்படும் டிரில்லியன் டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை மைனஸ் 271.3 டிகிரி குளிரில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.57 மணிக்கு கோளாறு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்துள்ளது.
இதையடுத்து தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டதால் தீயணைப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டன. பிங் பேங் சோதனை முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
கோளாறு ஏற்பட்டுள்ள கருவிகளை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட கருவியை சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டுவந்த பிறகே கோளாறைச் சரிசெய்ய முடியும் என்றும் அதற்கு சுமார் 2 மாதங்கள் ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிங் பேங் சோதனையின் முதல்கட்டம் வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடிகாரச் சுற்றுப் பாதையில் புரோட்டான்கள் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய அணு சக்தி மோதலில்தான் பிரபஞ்சம் தோன்றியது என்ற பிக் பேங் (பெரு வெடிப்பு) கோட்பாடே இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. பூமி உருவாகி உயிர்கள் தோன்றவும் இதுவே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான அணு சக்தி மோதலை தற்போது உருவாக்கி, அதன்மூலம் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டறிய 36 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ ஆழத்தில் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவில் 'பிங் பேங்' சோதனை மையத்தை அமைத்துள்ளனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவக் குழாயின் இரு புறங்களில் இருந்தும் புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க உள்ளனர்.
திரவ ஹீலியம் வாயுக் கசிவு!
புரோட்டான்கள் மோதும்போது ஏற்படும் டிரில்லியன் டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை மைனஸ் 271.3 டிகிரி குளிரில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.57 மணிக்கு கோளாறு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்துள்ளது.
இதையடுத்து தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டதால் தீயணைப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டன. பிங் பேங் சோதனை முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
கோளாறு ஏற்பட்டுள்ள கருவிகளை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட கருவியை சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டுவந்த பிறகே கோளாறைச் சரிசெய்ய முடியும் என்றும் அதற்கு சுமார் 2 மாதங்கள் ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிங் பேங் சோதனையின் முதல்கட்டம் வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடிகாரச் சுற்றுப் பாதையில் புரோட்டான்கள் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் பனிப்பொழிவு
செவ்வாய்க் கிரகத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றமைக்கான சான்றுகளை அக்கிரகத்தில் நிலை கொண்டுள்ள பீனிக்ஸ் விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி விண்கலத்திலுள்ள தன்னியக்க இயந்திரமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தினூடாக நீர் மூலக்கூறுகளை கொண்ட பாரிய பனிப்பளிங்குருக்கள் விழுவதை எடுத்துக்காட்டும் தரவுகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தன்னியக்க உபகரணத்தின் லேசர் கதிரலைகள் மூலமே செவ்வாய்க் கிரக வளிமண்டலத்தின் கூறுகளை ஆராய்ந்து மேற்படி தரவுகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பனிப் பளிங்குருக்களானது செவ்வாயின் மேற்பரப்பை அணுகுவதற்கு முன்பு, நீராவி நிலையை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
"இந்த பனி செவ்வாயின் மேற்பரப்பை உண்மையில் எவ்வாறு அடைகிறது என்பதை எதிர்வரும் மாதம்மேலும் உன்னிப்பாக அவதானிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என பீனிக்ஸ் விண்கலத்தின் முன்னணி விஞ்ஞானியான ரொரன்டோ யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜிம் வைட்வே கூறினார்.
"இது செவ்வாய்க் கிரகத்தில் மேற்பரப்பில் நீர் ஆவியாகி ஒடுங்கும் ஐதரசன் வட்டசெயற்பாடு இடம்பெறுவது தொடர்பில் முக்கிய சான்றாக இது உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே 25 ஆம் திகதி செவ்வாய்க்கிரகத்தின் வட பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய பீனிக்ஸ் விண்கலமானது, செவ்வாய்க்கிரகத்தில் பூகர்ப்பவியல் மற்றும் சுற்றுச் சூழலை ஆராயும் முகமாக பலதரப்பட்ட உபகரணங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ் விண்கலத்திலுள்ள காலநிலை அவதான நிலையம், செவ்வாய்க்கிரகத்தின் வெப்பநிலை, அமுக்கம் வளிமண்டலத்தில் இடம்பெறும் மாற்றங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.
இந்த தன்னியக்க உபகரணத்தின் லேசர் கதிரலைகள் மூலமே செவ்வாய்க் கிரக வளிமண்டலத்தின் கூறுகளை ஆராய்ந்து மேற்படி தரவுகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பனிப் பளிங்குருக்களானது செவ்வாயின் மேற்பரப்பை அணுகுவதற்கு முன்பு, நீராவி நிலையை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
"இந்த பனி செவ்வாயின் மேற்பரப்பை உண்மையில் எவ்வாறு அடைகிறது என்பதை எதிர்வரும் மாதம்மேலும் உன்னிப்பாக அவதானிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என பீனிக்ஸ் விண்கலத்தின் முன்னணி விஞ்ஞானியான ரொரன்டோ யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜிம் வைட்வே கூறினார்.
"இது செவ்வாய்க் கிரகத்தில் மேற்பரப்பில் நீர் ஆவியாகி ஒடுங்கும் ஐதரசன் வட்டசெயற்பாடு இடம்பெறுவது தொடர்பில் முக்கிய சான்றாக இது உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே 25 ஆம் திகதி செவ்வாய்க்கிரகத்தின் வட பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய பீனிக்ஸ் விண்கலமானது, செவ்வாய்க்கிரகத்தில் பூகர்ப்பவியல் மற்றும் சுற்றுச் சூழலை ஆராயும் முகமாக பலதரப்பட்ட உபகரணங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ் விண்கலத்திலுள்ள காலநிலை அவதான நிலையம், செவ்வாய்க்கிரகத்தின் வெப்பநிலை, அமுக்கம் வளிமண்டலத்தில் இடம்பெறும் மாற்றங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.
சைக்கிள் ஓட்டும் ரோபோ
நம்மால் ஒரு காலில் கொஞ்ச நேரம் நிற்பதே கடினம். ஆனால், ஒரு சக்கரம் மட்டுமே உள்ள கைப்பிடி கூட இல்லாத சைக்கிளை ஓட்டி சாதனை செய்கிறது ‘முரட்டா&சீகோ&சான்’ என்ற ரோபோ (இடது).
முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இது, தானாகவே பேலன்ஸ் செய்து கொள்வதுடன் சுற்றுப்புறங்களை உணர்ந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் புறநகர்பகுதியான சிபாவில் ‘சீடெக்’ வருடாந்திர எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி தொடங்கி உள்ளது.
இதில்தான் இந்த ரோபோக்கள் இடம்பெற்றுள்ளன.
முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இது, தானாகவே பேலன்ஸ் செய்து கொள்வதுடன் சுற்றுப்புறங்களை உணர்ந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் புறநகர்பகுதியான சிபாவில் ‘சீடெக்’ வருடாந்திர எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி தொடங்கி உள்ளது.
இதில்தான் இந்த ரோபோக்கள் இடம்பெற்றுள்ளன.
விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு மாபெரும் ஆபத்து
அண்டவெளியில் சஞ்சரிக்கும் விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு பாரிய அபாயம் காத்திருப்பதாகவும், எனவே முழு உலகமும் ஒன்றிணைந்து அதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் விசேட கூட்டத்தின்போதே விஞ்ஞானிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூமிக்கு அண்மையிலான வஸ்துகளின் விண்வெளி வெடிப்புகள் சபையைச் சேர்ந்த இவ் விஞ்ஞானிகள், இரு வருட தீவிர ஆராய்ச்சியையடுத்தே மேற்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.""பூமியை விண்கற்கள் அணுகும் பட்சத்தில் அது தொடர்பான அபாயத்தை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் தயாராக வேண்டும். எனவே நாம் இது சம்பந்தமான முயற்சிகளில் ஒரு நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்'' என மேற்படி சபை உறுப்பினரும் "அப்பலோ 9' விண்கல விண்வெளிவீரருமான ருஸ்தி ஸெவீக்கார்ட் கூறினார்.
மேற்படி அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் சர்வர·தச ரீதியான நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் போதிய அக்கறை இதுவரை செலுத்தப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார். எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமிக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய மேலும் பல விண்கற்கள் கண்டறியப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
5000 வருடங்களுக்கு முன் ஒரு பஸ் அளவிலான விண்கல்லொன்று அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் விழுந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் கடந்த சில வருடங்களில் கனடாவிலும் பெருவிலும் சிறிய அளவான விண்கற்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் சிபேரியாவின் காட்டுப் பகுதியில் விழுந்த விண்கல் மூலம் வெளிப்பட்ட சக்தியானது, ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்ட சக்தியிலும் 1000 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
65 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் விழுந்த பாரிய விண்கல்லால், டைனோஸர்களும் உலகின் ஏனைய 70 சதவீதமான உயிரினங்களும் அழிவடைந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
உலகின் மிகப் பழைமையான பாறை கனடாவில் கண்டுபிடிப்பு
கனடாவின் ஹட்ஸன் பே கடற்கரையில் 4.28 பில்லியன் ஆண்டுகள் பழைமையான உலகின் மிகவும் ஆதிகாலப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆதிகால உயிரினங்கள் தொடர்பான சான்றுகளையும் இப்பாறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"இப்பாறைகளில் மிகவும் விசேடத்துவம் பொருந்திய இரசாயன கையெழுத்தொன்று காணப்பட்டது.இது மிக பழைமையானதாகும். இத்தகைய பழைய கையெழுத்து உலகில் வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை." என மேற்படி கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் பங்கேற்ற மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்தின் பூகர்ப்பவியல் பேராசிரியர் டொன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இப்பாறையிலுள்ள இரசாயன சான்றுகளானது, உலகம் எவ்வாறு தோன்றியது, உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பன தொடர்பான பல மர்மங்களுக்கு தீர்வுகாண உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இப்பாறைகளில் மிகவும் விசேடத்துவம் பொருந்திய இரசாயன கையெழுத்தொன்று காணப்பட்டது.இது மிக பழைமையானதாகும். இத்தகைய பழைய கையெழுத்து உலகில் வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை." என மேற்படி கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் பங்கேற்ற மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்தின் பூகர்ப்பவியல் பேராசிரியர் டொன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இப்பாறையிலுள்ள இரசாயன சான்றுகளானது, உலகம் எவ்வாறு தோன்றியது, உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பன தொடர்பான பல மர்மங்களுக்கு தீர்வுகாண உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)