My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?
இதோ உங்களுக்கான தீர்வு..,



My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.

இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள்.



இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.

இணையம் : தெரிந்ததும் தெரியாததும்

உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.

ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.

இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.

Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.

Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.
E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.
Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்
இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.

HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.

Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது.

Hacker ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.

Instant Message (IM): இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்

Internet Service Provider (ISP): இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.

IP (Internet Protocol) address இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.

ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.

Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,

Modem: என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.

Offline: கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. .

Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.

Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.

Portal: மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ

Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.

Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்

Sub Domain: டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.

Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.

Top-level domains: டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.

Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.

World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.

Website : HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.

யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது.

நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால் கீழுள்ள முகவரில் டவுண்லோட் செய்யுங்கள் . பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.

விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கூகுல் போன்


ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது.

கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அமளி துமளியாக்கியது.

எது நிஜ‌ம் எது பொய் என்று பிரித்துண‌ர‌ முடியாத‌ அள‌வுக்கு கூகுல் போன் குறித்து எக்க‌ச்ச‌க்க‌மான‌ செய்திக‌ள் .

இந்நிலையில் கூகுல் போன் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 5 ம் தேதி அறிமுக‌மாக‌ப்போவ‌தாக‌ ராய்ட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌ம் ஒரு தீப்ப‌ற‌க்கும் செய்தியை வெளியிட்டுள்ள‌து.

ஒரு செல்போன் நசேவை நிறுவ‌ன‌த்தின் கூட்டோடு நெக்ச‌ஸ் ஒன் (கூகுல் போனின் பெய‌ராம்)அறிமுக‌மாக‌லாம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள் பற்றி ஹார் வர்டு- சுமித் சோனியன் மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின்போது நமது பூமியைப் போன்றே ஒரு கிரகம் சுழன்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகத்துக்கு, ஜிஜெ1214பி என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை சூப்பர் பூமி என்று அழைக்கிறார்கள். இந்த சூப்பர் பூமி 42 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இந்த புதிய கிரகம் மற்றொரு சூரிய மண்டலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியை போல இந்த சூப்பர் பூமி 2.7 மடங்கு பெரியதாக இருக்கிறது.

இந்த புதிய கிரகத்தில் பாதிக்கு பாதி தண்ணீர் உள்ளது. அங்கு உயிரினங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த சூப்பர் பூமி தன்னைத்தானே ஒரு தடவை சுற்றிக்கொள்ள 38 மணி நேரமாகிறது.

சூப்பர் பூமி எப்போதும் மிகுந்த வெப்பத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது சாதாரணமாகவே 200 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே அங்கு மனிதர்கள் குடியேற இயலாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றாலும் “புதிய பூமி” தொடர்பாக முழுமையான ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி

கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது.

இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அமைந்துள்ள மான் ஹாட்டன் தீவை விட இந்த பனிக்கட்டி 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

பனிக்கட்டியில் கப்பல் மோதி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை அனுப்பி உள்ளனர்.

பனிக்கட்டி மெல்ல, மெல்ல உருகி கரைந்து விடும். இதற்கே 2 வாரத்துக்கு மேல் அல்லது ஒரு மாதம் வரை கூட ஆகலாம் என்று கணித்து உள்ளனர்.

சூரியனை விட வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை விட 35 மடங்கு வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 3500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த சூடான நட்சத்திரம் உள்ளது.

இது 2 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இதை தங்களது ஹபிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ள, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான ஆராய்ச்சியாளர்கள்.

இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்தது ஒரு சாதனை என்றால் மேகங்கள் மற்றும் தூசு மண்டலத்தைக் கடந்து படம் பிடித்தது பெரிய சாதனை எனப்படுகிறது.

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேறும் விண்டோஸ் 7

மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.

புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.

அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.

நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.

3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.

4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.

7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.

8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.

இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.

மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.

விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.

பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்

பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல் மனித குலத்தை அச்சுறுத்தும் விண்கற்களால் ஆபத்து நேருமா?

பெளதிகம், இரசாயனம், கணிதம், தொழில் நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.

தற்பொழுது அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் அண்மையில் நிலாவிற்கு சந்திராயன் என்ற பெயருடைய செயற்கைக் கோளை ரொக்கெட் மூலம் ஏவி சாதனைபடைத்தது. அம்புலியிலிருந்து சந்திராயன் அனுப்பிவைத்த தகவல்களின்படி அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆசிவாதிகள் இரவு, பகல் அடுத்தடுத்து உண்டாவதையும் வடக்கு, தெற்கு துருவப் பிரதேசங்களில் நீங்கலாக ஏனைய கண்டங்களில் சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பன்னிரெண்டு மணிநேரம் காட்சியளிக்கின்றமையும் கண்டறிந்தனர். வீடு நிர்மாணிப்பதற்கு முக்கிய மூலவஸ்து வாகத் (மற்aரியல்) திகழ்கின்ற சீமெந்து கண்டுபிடிக்கப் படாமையினால் இரவில் திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்.

இதனால் புராதன மக்கள் ஆகாயத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற சந்திரன் அடங்கலாக விண்மீன்கள், வானிலிருந்து புவியை நோக்கி மின்னல் வேகத்தில் விழுகின்ற விண்கற்கள் போன்றவற்றினால் தங்களுக்கு ஏற்படுகின்ற நன்மைதீமைகள் எவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டனர்.

மேலும் வானத்தில் அபூர்வமாகக் காட்சியளித்த வால்வெள்ளி! அவர்களுக்கு பெரும் கிலியை உண்டு பண்ணியது. தூமகேது தோன்றினால் தமக்கோ அல்லது நாட்டிற்கோ கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று முழுமையாக நம்பினார்கள்.

எனவே ஆகாய கங்கையில் சூரியனை நீர்வட்டமாகச் சுற்றி வருகின்ற பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் நெட்ரியூன் மற்றும் கிரகங்கள் பட்டியலில் இருந்து சர்வதேச விஞ்ஞானிகளினால் நீக்கப்பட்ட புளூட்டோ என்பனவற்றின் தாற்பரியங்கள் எவை என்பதை நோக்குவோம். அத்துடன் நட்சத்திரங்கள் விண்கற்கள், விண்துகள்கள் போன்ற பற்றியும் சிறிது ஆராய்வோம்.

அதற்கு முன் வான்வெளியில் நாம் காண்கின்ற விண்மீன்கள், கோள்கள் போன்றவற்றின் அசைவு, உருவமைப்பு, தன்மை ஆகியவற்றின் ஆராய்ச்சியே விண்ணியல் ஆகும் என்றும் கூறலாம். இது ஏனைய அறிவுத்துறைகளை எல்லாம் உள்ளடக்கிய பரந்த துறையாகும்.

கிரேக்க நாட்டு விஞ்ஞானியான அரிஸ்ரோட்டில் மற்றும் தொலமி ஆகியோர் புவி தட்டையானது அல்ல முட்டை வடிவானது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர். மேலும் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டாம் ஆண்டு இத்தாலி நாட்டின் கலிலியோ என்ற விஞ்ஞானி அண்டவெளியை அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து மூட நம்பிக்கையை பிழையென்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் கத்தோலிக்க திருச்சபை அவர் கூறுவது பொய் என்ற அடிப்படையில் சிறைக்கு அனுப்பியது. அதன் பின்னர் இத்துறையை மிகவும் துல்லியமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் இருவர் சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதை வட்ட வடிவமானது அல்ல நீள்வட்டப் பாதை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்தனர். ஆயிரத்து எழுநூற்று இருபத்தேழாம் ஆண்டு பிரித்தானிய கணித விஞ்ஞானியான சேர் ஐஸாக் நியூட்டன் ஒரு அப்பிள் மரத்திலிருந்து பழம் கீழ் நோக்கி விழுவதைக் கண்டு பல உண்மைகளைக் கண்டார்.

இதன் அடிப்படையில் இவ்வுலகில் உள்ள பொருட்கள் யாவும் ஒன்றையொன்று கவருகின்றன என்றும் அறிந்துகொண்டார். அதன் பின்னரே ‘நியூற்றன்ஸ் விதி விஞ்ஞானத் துறையினரின் பயன்பாட்டிற்கு அறிமுகமானது. அதன் பின்னர் தோன்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பயனாக மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. சில விண் மீன்களிலிருந்து வெளியேறும் ஒளியானது புவியை வந்தடைய இருபது கோடி வருடங்கள் செல்கின்றன என்பதையும் அந்நட்சத்திரம் நிலைகொண்டுள்ள தொலைவை ஒளி ஆண்டு அலகில் கூறி வைத்தனர்.

அக்காலகட்டத்தில் ரொக்கெட்டோ செயற்கைக் கோளோ கண்டுபிடிக்கப்படவில்லையென்பதனால் வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி அனைத்தையும் அதிசக்தி உயர்ந்த தொலைநோக்கி மூலம் தான் விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முடிந்தது. நிலாவின் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மற்றும் சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள ரம்மியமான வளையங்களையும் கண்டுவியந்தனர்.

ஒரு நட்சத்திரத்தை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொலைநோக்கியினூடாகப் பார்த்தாலும் வெறும் கண்ணால் நோக்குவது போல அது ஒரு ஒளிப்புள்ளியாகவே தென்படும். ஏனெனில் விண்மீன்கள் புவியிலிருந்து கோடிக்கணக்கான ஒளியாண்டு தொலை தூரத்தில் இருப்பதே பிரதான காரணியாகக் கொள்ளலாம். பதினான்கு கோடி எண்பத்து எட்டு இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள சூரியனின் ஒளி பூமியை வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள் எடுக்கின்றன.

சாதாரண ஒளிக்கதிரை ஓர் அரியத்தின் ஊடாகச் செலுத்தினால் அவ்வொளியில் வானவில்லில் தோன்றும் ஏழு வர்ணங்களையும் வெளிப்படுத்தும் என்பதை விஞ்ஞானிகளான ஐஸாக் நியூற்றன் சி.வி. இராமன் போன்றவர்கள் நிரூபித்துக் காண்பித்தனர்.

இது வரை காலமும் பூமியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தவாறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் அண்டவெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் விண்வெளி மையத்தில் இருந்தவாறு வேற்றுக் கிரகங்களின் பலவிலைமதிக்க முடியாத தரவுகள் பெறப்படுகின்றன.

இனி சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்ற பூமியைப் பற்றி சிறிது ஆராய்வோம்.

பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான வட்டமாக இருப்பதில்லை. இருதுருவங்களில் சிறிது தட்டையாகவும் கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று படுத்தும் இருக்கின்றது. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் பன்னிரண்டாயிரத்து அறுநூற்று எண்பத்து மூன்று கிலோ மீற்றராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் முந்நூற்று அறுபத்து ஐந்தே கால் நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் ணி|Zரிதினால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.

அடுத்து சந்திரனைப் பார்ப்போம். சந்திரன் பூமியின் உப கிரகமாகும். ஜீவராசிகளுக்கு சூரியனைப் போல் சந்திரன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் சந்திரன் இல்லையென்றால் குளிர்ந்த நிலா வெளிச்சத்தை நாம் கண்டுகளிக்க முடியாது. பூமி சூரியனைச் சுற்றிவருவது போலச் சந்திரனும் புவியைச் சுற்றி வருகின்றது. பூமியில் ஒருவன் ஒரு கல்லை அறுபது மீற்ற உயரத்திற்கு எறிவானெனின் சந்திரனில் முண்ணூற்று அறுபது மீற்றர் தூரத்திற்கு எறிவான். சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியில் உள்ளதைவிட ஆறிலொரு பங்காகும்.

பூமியில் சூரிய வெப்பத்தை வாயுக்கள் ஓரளவு தடுத்து குறைக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாத படியினால் சூரியக் கதிர்கள் விழுகின்ற பகுதியில் வெப்பநிலை கூடவே காணப்படும். ஏனைய பகுதிகளில் துருவப் பிரதேசங்களில் உள்ள உஷ்ண நிலையைக் கொண்டிருக்கும். தொலை நோக்கி வாயிலாக சந்திரனை உற்று நோக்கினால் அதன் மேற் பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அவதானிக்கலாம். இதுவே எங்களுக்கு பாட்டி வடைசுடுவது போன்று காட்சியளிக்கின்றது.

சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே அளவு நேரத்தில் அது தன்னைத்தானே சுற்றுகிறது. இதனால் பூமியில் உள்ளோர் நிலாவின் ஒரு பகுதியைத்தான் எப்பொழுதும் காணக்கூடியதாகவுள்ளது.

இனி புதன் பற்றி அறிவோம். இதனை ஆங்கிலத்தில் ‘மெர்க்கூரி’ என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு மிகவும் அண்மையில் நிலைகொண்டுள்ள கிரகம் புதனாகும். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் நான்காயிரத்து எண்ணூறு கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது.

புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர எண்பத்தெட்டு நாட்கள் செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் நானூறு பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ இருநூற்று எண்பது பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள தொலைநோக்கி வாயிலாக புதனை உற்று நோக்கினால் வளர்பிறை, தேய்பிறை பூரணை, அமாவாசை நிகழுவதைக் காணலாம். இப்பிரபஞ்சத்தில் நிகழுகின்ற அற்றபுதங்களை கண்டுகளிக்க உறுதுணை புரிகின்ற தொழில்நுட்ப கருவிகள் நவீன முறையில் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன.

சுக்கிரனை (வீனஸ்) ஆராய்வோமாகில் இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் பன்னிரெண்டாயிரத்து முன்னூற்று இருபது கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.

இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு ஜூன் ஆறாம் திகதி நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.

இனி அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய் (மார்ஸ்) பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு அறுநூற்று எண்பத்தேழு நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற இருபத்து நான்கு மணி நேரமும் முப்பத்தேழு நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது.

செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும்.

இனிநாம் ஆராயவேண்டிய கிரகம் வியாழன் (ஜுபிற்றர்) ஆகும். இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ (ஜயன்ற் பிளனற்) என அழைக்கப்படுகின்றது.

இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற ஒன்பது மணித்தியாலங்களும் ஐம்பத்து ஐந்து நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது. வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர்.

எமது ஆராயவேண்டிய பட்டியலில் அடுத்து வருவது யுரேனஸ் ஆகும். ஆயிரத்து எழுநூற்று எண்பத்தோராம் ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் நாற்பத்தெட்டாயிரம் கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற எண்பத்து நான்கு வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன.

அடுத்ததாக நெப்ரியூனைப் பார்ப்போம். இக்கிரகம் ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறாம் ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. நூற்று அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுற இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் (நேகட் ஐஸ்) பார்க்க முடியாது.

இனி இக்கால விஞ்ஞானிகளினால் கிரகங்கள் பட்டியலிலிருந்து துரதிஷ்டவசமாக நீக்கப்பட்ட புளூட்டோபற்றி சிறிது ஆராய்வோம். இக்கிரகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரால் 8qனிtபிடிக்கப்பட்டது. இது சூரியனிலிருந்து ஐநூற்று எழுபத்தாறு கோடி கிலோ மீற்றர் தொலைதூரத்தில் உள்ளது.

இனி தற்கால விஞ்ஞானிகளினால் புளூட்டோ கிரகத்தை கோள்கள் பட்டியலிருந்து நீக்கியமைக்குரிய பிரதான காரணியைப் பார்ப்போம். அதாவது புளூட்டோவிற்கு கிரகங்களுக்கு இருக்க வேண்டிய தாற்பரியங்கள் மிகக் குறைவாகவே உள்ளதைக் குறிப்பிடலாம்.

இனி விண்துகள் பற்றிப் பார்ப்போம். அதாவது செவ்வாயின் பாதைக்கும் வியாழனின் பாதைக்கும் இடையில் வித்தியாசமான பருமனுடைய பல்லாயிரக்கணக்கான சிறு வஸ்துக்கள் ஏனைய கோள்களைப் போலவே சூரியனை ஒழுங்காகச் சுற்றி வருகின்றன. இவற்றையே விண்துகள்கள் என்று அழைக்கின்றனர்.

இறுதியாக விண்கற்கள் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். வானத்தில் கரு முகில்கள் இல்லாது கோடான கோடி விண்மீன்கள் எம்மைப் பார்த்து கண் சிமிட்டுகின்ற வேளையில் நட்சத்திரம் போன்ற தோற்றமுடைய பொருளொன்று திடீரென்று புவியை நோக்கி மின்னல் வேகத்தில் வானவில்லில் உள்ள வர்ணங்களுடன் வீழ்வதைக் காண்கின்றோம். இதுதான் விண்கற்களாகும். சிறிய கற்களினால் பூமியில் வாழ்வோருக்கு பங்கம் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஆயிரத்து தொள்ளயிரத்து எட்டாம் ஆண்டு சைபீரியக்காட்டில் வீழ்ந்த பாரிய விண்கல்லினால் பெரும்சேதம் உண்டாகிவிட்டதை அறிகின்றோம்.

இதனால் ஏற்பட்ட குழி சுமார் நாற்பத்து ஐந்து கிலோ மீற்றர் விட்டம் உடையதாம். வனப் பிரதேசத்தில் வீழ்ந்த காரணத்தினால் மனித உயிர்களுக்கு அவ்வளவாக தேசம் ஏற்பட்டிருக்காது. ஆனால் நகர்ப்புறங்களிலோ அல்லது சமுகத்திரங்களோ ராட்சஷ விண்கற்கள் விழும் பட்சத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு விடும். கடலில் விழுகின்ற பாரிய பருமனுடைய விண்கல்லால் சுனாமி ஏற்படலாம். இதன் கொடூரத்தை நாம் இரண்டாயிரத்து நான்கு டிசம்பர் மாதம் நன்கு உணர்ந்து கொண்டோம் தானே!

பிரபஞ்சத்தில் உள்ள அற்புதங்களை விஞ்ஞானிகள் கண்டுகளிக்க தொழில்நுட்ப சாதனங்கள் உறுதுணை புரிகின்றன. அவற்றில் அதிசக்தி வாய்ந்த தொலை நோக்கி, ராடார், ராக்கெட்டில் ஏவப்படுகின்ற ‘ஸ்கை லாப்’ என்பனவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர் என்பது இந்நூற்றாண்டு வாழ் மக்கள் செய்த பெரும் பாக்கியம்.

வின்டோஸ் 7 வெற்றி பாதையில்.....


கூகிளின் வளர்ச்சியால் தலையை சொறிந்து கொண்டிருந்த மைக்கிரோசொப்ருக்கு கொஞ்சம் ஆறுதலான விடயம் அண்மையில் அதனால் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்ட Windows 7 விற்பனை கொடிகட்டி பறப்பதுதான்.

பெருமளவான Vista மற்றும் Windows XP பாவனையாளர்கள் Windows 7 க்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி 22 ல் Windows 7 வெளியிடப்பட்ட பிறகு அதன் விற்பனை, 2007 தை மாதத்தில் Windows Vista வெளியிடப்பட்டபோது அதன் விற்பனையிலும் பார்க்க 234% உயர்வாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

Net Application எனும் நிறுவனம் அண்மையில் கணிணி இயங்கு தளங்களின் பாவனை தொடர்பாக, இணைய உலாவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில், NetApplication நிறுவனத்தால் ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து கணினி களிலும் கார்த்திகை 1 ம் திகதி 3.6% ஆனவை Windows 7 இயங்குதளத்தை கொண்டிருந்த்து. இது Windows 7 உத்தியோகமாக வெளியிடப்பட்ட ஐப்பசி 22 ல் 1.99% ஆகவும் அதற்கு முன்னைய தினம் 21 ல் 1.89% ஆகவும் இருந்த்தாக கூறப்படுகிறது.

2009 ஐப்பசி மாதம் எல்லா வகையான இயங்கு தளங்களை கொண்டிருந்த கணினிகள் 92.52%. சோகம் என்னவென்றால் இது 2008 மார்கழி மாதம் 94% ஆக இருந்தது தான்.

Mac OS X -5.27 %
Linux at -0.96 %

அமேசன் இணையதளத்தில் Windows 7 க்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை, 2007ல் வெளிவந்த ஹரிப்பொட்டர் புத்தகங்களின் இறுதிப்பாகமான Harry Potter and the Deathly Hallows, புத்தகத்திற்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை யிலும் பார்க்க அதிகம் என அமேசன் இணையதளம் தெரிவித்திருக்கிறது என்றால் பாருங்களேன்.

பிரித்தானியாவின் பிரபலமான guardian.co.uk இணையத்தளம் தனது தளத்துக்கு வருகை தருபவர்களில் Windows 7 பாவனையாளர்களின் எண்ணிக்கை Linux பாவனையாளர்களை மிஞ்சியிருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களில் Windows 7 பாவனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்ததுடன் ஜூன் மாதம் இது முதன்முறையாக Iphone பாவனையாளர்களை முந்தியிருந்ததாக guardian இணையத்தளம் மேலும் தெரிவித்திருக்கிறது.

Windows 7 ன் இந்த வெற்றிக்கு காரணம் இது Windows Vista உடன் ஒப்பிடும் போது நல்ல வேகம் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கொண்டிருப்பதுடன் குறைந்த விலையில் கிடைப்பது மற்றும் சாதாரண தர கணினி, களிலும் நிறுவகூடியதாக இருப்பதுதான்.

கூகிள் மற்றும் அப்பிள் கம்பனிகளுடன் கடும் போட்டியில் இருக்கும் மைக்கிரோசொப்ருக்கு Windows 7 கொஞ்சமாவது ஆறுதலை கொடுத்திருக்கும்.

நெருப்பு நரி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடயங்களை அழிக்கலாம்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து பல விஷயங்களைப் பெறுகிறோம். வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக, பன்னாட்டளவில் தகவல்களைத் தேடுவார்கள். வேலை தேடுபவர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கென இணையத்தில் தங்கள் தேடலை மேற்கொள்வார்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இத்தகைய தேடல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதே. ஆனால் உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் ஹிஸ்டரியாகப் பதியப்படுகிறதே. இதனைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், நீங்கள் என்ன என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்று அறிந்து, அவர்களும் அந்த தளங்களில் இருந்து தகவல்களைப் பெற்று உங்களுக்குப் போட்டியாக செயல்படலாமே. ஆம், இதற்கு என்ன வழி?

இத்தகைய நிலை சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வரும் பிரவுசர் பதிப்புகள், உங்களின் இன்டர்நெட் உலா, அடுத்தவர் பார்த்து அறியாத வகையில் இருக்க செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வசதிகளை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். பிரவுசர்களில் உள்ள இந்த வசதிகளுடன் சில தேர்ட் பார்ட்டி புரோகிராம் எனப்படும் சில புரோகிராம்களும் இந்த வசதியை அளிக்கின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5 ஆகியவை சார்ந்த பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

1. முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பார்ப்போம். டூல்ஸ் மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், மேலாக உள்ள டெலீட் பிரவுசிங் ஹிஸ்டரி என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து ஆப்ஷன்கள் தரப்படும். இந்த ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பார்த்த தளங்களின் பட்டியலை அழிக்கலாம்; குக்கி பைல்களை நீக்கலாம்; இப்படி உங்கள் பிரவுசிங் சம்பந்தமான அனைத்து தடயங்களையும் நீக்கலாம்.



எவற்றை நீக்க வேண்டும் என முடிவு செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். ஆனால் எதனையும் நீக்கும் முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். ஏனென்றால் பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் அமைத்திருக்கலாம். அவற்றை நீக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதில் யோசித்து முடிவெடுக்கவும். அதே போல Form Data, Cookies ஆகியவற்றை நீக்கினால், உங்கள் இன்டர்நெட் பயன்பாடு சற்று தாமதமடையலாம்; அல்லது முழுவதுமாக மாறலாம். எனவே தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

2. இன்னொரு வழியைப் பார்ப்போம். இப்போதும் டூல்ஸ் மெனு கிளிக் செய்து, Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில், Privacy டேப் என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் பெறும் ஆப்ஷன்கள் மூலமாக, உங்களுடைய கம்ப்யூட்டரில் பதியப்படும் குக்கிகள் எப்படி உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாட்டில் உதவலாம் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.



பொதுவாக குக்கு பைல்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை உடையவை என்று நாம் எண்ணி வந்தாலும், பல குக்கிகள் அவை சார்ந்த தளங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத் தளத்திற்கு உணர்த்தி, அந்த தளத்துடனான நம் அனுபவத்தினைச் சீராக்குகின்றன. எனவே இங்கு தரப்படும் செட்டிங்ஸ் ஸ்கேலில், Medium என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

3. இன்டர்நெட் வெப்சைட்களுக்கு நாம் செல்கையில், அந்த தளங்களில் இருக்கும் இமேஜஸ் மற்றும் பிற தகவல்களை நாம் வைத்திருக்கும் பிரவுசர்கள் காப்பி செய்து வைத்துக் கொள்கின்றன என்று பலருக்குத் தெரியாது. இந்த பைல்களை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில் உள்ள General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்கலாம். இதன் மூலம் நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்கையில், அந்த தளங்கள் விரைவில் நமக்குக் கிடைக்க இந்த பைல்கள் உதவுகின்றன. Browsing History பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்து பின் View Files என்பதைத் தட்டினால், இந்த பைல்களைக் காணலாம்.



இவ்வாறு பைல்கள் குவிவதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பிரவுசிங் முடிந்து, பிரவுசரை மூடும்போது, அவை அனைத்தையும் போல்டரிலிருந்து நீக்கும் படி நீங்கள் செட் செய்திட முடியும்.

Internet Options விண்டோவில், Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எனவே கவனமாக இதில் ஸ்குரோல் செய்திட வேண்டும். தவறுதலாக எதனையேனும், நம்மையும் அறியாமல் தேர்ந்தெடுத்து விட்டால், பின் பிரவுசிங் செய்திடுகையில் பிரச்சினை ஏற்படும். ஏற்கனவே பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் சில ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இவற்றை நீக்கிவிடாமல் வரிசையாகச் செல்ல வேண்டும். அப்படி எதனையேனும் நீக்கியதாக உணர்ந்தால், உடனே Cancel பட்டன் கிளிக் செய்து மீண்டும் இந்த விண்டோவினைத் திறந்து செலக்ட் செய்திடலாம். இனி இந்த லிஸ்ட்டில் ஸ்குரோல் செய்து அதில் ‘Empty Temporary Internet Files Folder when browser is closed’ என்ற ஆப்ஷன் உள்ள வரியினைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பயர்பாக்ஸ் 3.5 தொகுப்பு மேலே தரப்பட்டுள்ள பல வசதிகளை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள வழிகளைத் தருகிறது.Tools மெனுவில் Clear Private Data என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் நீங்கள் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் டெம்பரரி இன்டர்நெட் பைல்களைக் காலி செய்திட Cache என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.

இங்கும் பிரவுசர் மூடப்படுகையில் பெர்சனல் தகவல்கள் அனைத்தையும் நீக்குமாறு செட் செய்திடலாம். Tools மெனுவிலிருந்து Options செலக்ட் செய்திடவும். இங்கு Privacy என்ற டேப் அழுத்தினால் கிடைக்கும் பாக்ஸில் Settings அழுத்தவும். பின் Settings for deleting history என்ற விண்டோ கிடைக்கும். இதில் எந்த வகை டேட்டா இருக்கக் கூடாது என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கொடுத்து மூடலாம்.

மாலைப்பொழுதினில்...!!!


மாலைப்பொழுதினில்
கதிரவனின் சிறுகதிர் வீச்சில்
மழைநாள் வானவில் போல்
கண்முன்னே சென்றாயடி...!!!

வீதியுலா நீ வரும்போது
உன் வதனம் காண்கையில்
எண்ணற்ற மகிழ்ச்சி
என் முகமதில் வீசுதடி

சிறிதானதொரு புன்முறுவல்
சலனமில்லாததொரு பார்வை
பெளர்ணமி போன்ற உன் வதனம்
மகிழ்வினைத் தருகுதடி

தொலைதூரம் செல்வது ஏனோ...?



கண்ட நாள் முதலாய்
என் நினைவினில் நிற்கின்றாயே...!!!
கண் பார்த்துக் கதைக்க முடியா
தொலைதூரம் செல்வது ஏனோ...?

முகம் முன்னே நிற்கையில்
அருகாமை இருந்த நீ...!!!
அகம் உள்ளே வந்ததும்
தொலைதூரம் செல்வது ஏனோ...?

உன்னுயிராய் இருக்கையில்
மிகக் கிட்ட இருந்த நீ..!
என்னுயிராய் வந்ததும்
தொலைதூரம் செல்வது ஏனோ...?

கண் திறந்து நடமாடும் போதும்
கண் மூடி துயில் கொள்கையிலும்
கண்ணெதிரே தெரிந்த நீ
தொலைதூரம் செல்வது ஏனோ...?

பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?

முதலில் சிறந்த பாதுகாப்பான Anti-virus உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளுங்கள் , வாரம் இருமுறை உங்கள் கணினியை scan செய்யுங்கள்.

விண்டோஸ் பயன்படுத்துவதை விட Linux OS (UBUNDU,SUSE,MANDRIVA) நிறுவிக்கொள்ளுங்கள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது இரண்டையும்கணினியில் நிறுவி இணையதள பயன்பாட்டுக்கு Linux பயன்படுத்தலாம்.

பெரும்பாலான வைரஸ் கள் விண்டோசை குறிவைத்து உருவக்கபடுவதே இதற்க்கு காரணம்.Linux ஸை வைரஸ் அவ்வளவு எளிதில் பாதிக்காது. அப்படி பதித்தாலும் எளிதில் அகற்றிவிடலாம்.

கணினியில் Internet Explorer இருந்தாலும் கூடுதலாக ஒரு Firefox அல்லது Google crome Browser நிறுவிக்கொள்ளுங்கள் ஏனெனில் மேற்கூறிய காரணம் இதற்கும் பொருந்தும்.

இணையதள முகவரியை டைப் செய்யும்போது கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் பிரபல தளத்தின் முகவரியில் ஓரிரு எழுத்துக்கள் மட்டும் மாற்றி வைத்திருப்பார்கள் அவ்வாறு செல்லும்போது வைரஸ் பதிப்பை உண்டக்கிவிடுவார்கள்.

கேம்ஸ் டவுன்லோட் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை ,பாதுகாப்பான (Brothers soft,cnet) போன்ற இணைய தளங்களில் மட்டும் Download செய்யுங்கள் , பெரும்பாலான இணையதளங்கள் இலவசம் என்ற பெயரில் வைரஸ் இணைத்து விடுவார்கள், மேற்கூறிய தளங்களில் இவை நிகழ்வதில்லை.

POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் .

புது software ,games போன்றவற்றை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் , குறிப்பாக இன்ஸ்டால் செய்யும் போது Agreement எவ்வளவு பெரியதாக இருந்தாலும் முழுவதும் படித்துவிட்டு instaal செய்யுங்கள்.
Community Websites செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள் தற்ப்போது அவற்றில் இருந்துதான் மிக அபாயகரமான வைரஸ்கள் வருகின்றன .

இணையத்தளத்தில் Social Engineering Techniques எனப்படும் இணையதள உபயோகிப்பாளர்களின் weakness ஆபாச படங்கள், கண்கவரும் படங்கள், illegal copy of softwares,flashanimations, love ,sex,success contents போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வைரஸ்களை உருவாக்கி அத்துடன் இணைத்து விடுகின்றனர் .இதுதான் தற்போதைய வைரஸ் பரப்பும் புதிய தொழில்நுட்பம் .

இவற்றை தெரிந்து இணையத்தளத்தில் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தலாம் .

கூகுலின் புதிய சேவை

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது.

இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் நியூயார்க் டைம்ஸ்,வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட பிர‌ப‌ல‌ செய்திதாள் நிறுவ‌ன‌ங்க‌ளோடு ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்டுள்ள‌து.

கூகுல் ஏற்க‌ன‌வே கூகுல் நியூஸ் என்னும்பெய‌ரில் செய்தி சேவையை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.இந்த‌ சேவை பிர‌ப‌ல‌மாக‌ இருந்தாலும் நாளித‌ழ் நிறுவ‌ன‌ங்க‌ளால் க‌டுமையாக‌ விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.த‌ங்க‌ள் செய்திக‌ளை எடுத்து வெளியிட்டு கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் காசு பார்ப்ப‌தாக‌ நாளித‌ழ்க‌ள் சார்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌வே நாளித‌ழ்க‌ளுக்கு இது சோத‌னையான‌ கால‌ம் தான்.இண்டெர்நெட்டின் போட்டி கார‌ண‌மாக‌ நாளித‌ழ்க‌ளின் வ‌ருவாய் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிலையில் கூகுலின் செய்தி சேவையை ஒரு சுர‌ண்ட‌லாக‌வே நாளித‌ழ்க‌ள் பார்க்கின்ற‌ன‌.த‌ங்க‌ள் உழைப்பை உறிஞ்சித்தின்னும் ஒட்டுண்ணி என்று வால் ஸ்டிரீட் ஜ‌ர்ன‌ல் ஆசிரிய‌ர் ச‌மீப‌த்தில் காட்ட‌மாக‌வே கூறியிருந்தார்.

இந்த‌ பின்ன‌ணியில் தான் கூகுல் பாஸ்ட்பிலிப் செய்தி சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.கூகுல் செய்தி சேவைக்கும் இதற்கும் அடிப்படையிலேயே வித்தியாச‌ம் உள்ள‌து.பாஸ்ட்பிலிப் சேவையில் செய்தி ப‌க்க‌ங்க‌ள் புகைப்ப‌ட‌ம் போல‌ ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்வ‌து போல அமைந்திருக்கிற‌து.ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்தால் ப‌டித்துக்கொண்டே போகலாம்.

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ கூகுல் இவ்வாறு செய்துள்ள‌து.ஒன்று வ‌ழ‌க்க‌மான‌ செய்தி இணைப்பை காட்டிலும் இப்ப‌டி கிளிக் செய்யும் போது ப‌த்திரிக்கையை புர‌ட்டும் உண‌ர்வை பெற‌ முடியும்.அதைவிட‌ முக்கிய‌மாக‌ ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌தும் விரைவாக‌ இருக்கும்.

செய்தி த‌ள‌ங்க‌ளுக்கு செல்லம் போது குறிப்பிட்ட ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌து தாம‌தாவ‌தே இணைய‌வாசிக‌ள் அதிக‌ நேர‌ம் செய்தி த‌ள‌ங்க‌ளில் த‌ங்காத‌த‌ற்கான‌ கார‌ண‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.மாறாக‌ புர‌ட்டிப்பார்க்கும் வ‌ச‌தியோடு விரைவாக‌ ப‌டிப்ப‌து சாத்திய‌மானால் இணைய‌வாசிக‌ள் அதிக‌நேர‌ம் செல‌விடுவார்க‌ள் என்று கூகுல் எதிர‌பார்க்கிற‌து.இத‌னால் அதிக‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை வெளியிட‌ முடியும்.

செய்தி சேவையில் கூகுல் விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயை தானே வைத்துக்கொண்டாலும் பாஸ்ட்பிலிப் சேவையில் வ‌ருவாயை நாளித‌ழ்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ முன்வ‌ந்துள்ள‌து.அதாவது இணைந்து சம்பாதிப்போம் என கூகுல் நாகிதழ்களோடு கைகோர்த்துள்ளது.

ப‌த்திரிக்கைகளை ப‌டிக்கும் அனுப‌வ‌த்தையும் வ‌ச‌தியையும் இண்டெர்நெட் தொழில்நுட்ப‌த்தோடு இணைந்துத‌ரும் வ‌ச‌தியாக‌ கூகுல் இத‌னை வ‌ர்ணித்துள்ள‌து.

இந்த‌ சேவை வெற்றி பெற்றால் நாளித‌ழ்க‌ளுக்கு வ‌ருவாய் வ‌ருவ‌தோடு கூகுல் மீதான‌ விம‌ர்ச‌னமும்,கோபமும் குறையும்.

பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன

பூமியில் பிராண வாயு தோன்றுவதற்கு 200மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கடல்களில் உயிரினங்கள் வாழ்ந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமியின் வரலாற்றில் 'ஆர்ச்சியன்' காலக் கட்டம் என்று அழைக்கப்படும் காலத்தில் விஷ வாயுக்களான மீத்தேன், அம்மோனியா மற்றும் பிற விஷ வாயுக்களே இருந்தன. இதனால் இந்தக் காலக்கட்டங்களில் உயிரினங்கள் இருந்திருக்க வாய்பே இல்லை என்றுதான் இது நாள் வரையிலான ஆய்வுகள் தெரிவித்து வந்தன.

தற்போது நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தின் புதிய சர்வதேச ஆய்வுக் குழு, பூமியில் சுவாசிப்பதற்கான வாயு இல்லாத காலக் கட்டத்திலும் தாவரம் போன்ற பாக்டீரியாக்கள் இருந்ததாக கண்டு பிடித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் 2 அல்லது 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையான கடலடி பாறைகளின் மீதங்களை வைத்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் சுழற்சியின் ரசாயன ஆதாரங்கள் இதனை நிரூபித்துள்ளதாக கூறும் இந்த ஆய்வு, பிராண வாயு இல்லாமல் இருந்திருந்தால் இது நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளது.

வாழும் உயிரிகள் நைட்ரஜன் சுழற்சியைப் பெற்று மேலும் சிக்கலான இயற்கை மூலக் கூறுகளை உற்பத்தி செய்துள்ளது.

இந்த நைட்ரஜன் சுழற்சியின் இருப்பு பூமியில் பிராண வாய்வு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்ததற்கான சுவடு என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒளி இயைபாக்க (Photo Synthesis) நடவடிக்கை மூலம் பிராண வாயுவை ஒரு துணைப்பொருளாக உற்பத்தி செய்த உயிரிகள் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியுள்ளன என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அதன் பிறகு 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே வளி மண்டலத்தை பிராண வாயு செறிவூட்டியது என்று கூறியுள்ளனர்.

"நைட்ரஜன் ஒப்பு நோக்கி பார்க்கப்படும்போது, ஒரு அசையா மூலக்கூறும், அதன் வளிமண்டல ஆயுள் ஒரு பில்லியன் ஆண்டுகள்" என்கிறது இந்த ஆய்வு.

மாறாக பிராண வாயு உற்பத்திக்கான ஒளி இயைபாக்கம் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.

இருப்பினும் பூமியில் எப்போது பிராண வாயு ஒளி இயைபாக்கம் தொடங்கியது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனதைப் படிக்கும் மூளை துளை
























மூளை சொல்ல நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகள் தான் எல்லாமே இல்லையா? மூளையிலிருந்து புறப்படும் எண்ண அலைகள் தான் நம்முடைய எல்ல செயல்களுக்கும் காரணம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே! மூளை என்னதான் கட்டளை அனுப்பினாலும் அதை உள் வாங்கி செயல்படுத்த நம்முடைய மற்ற உறுப்புகள் ஒத்துழைத்தால் தான் எல்லா வேலைகளும் சரியான முறையிலே நடை பெறும். ஒரு வேலை அப்படி அந்த கட்டளைகளை செயல் படுத்த கூடிய உறுப்புகள் செயல் இழந்து விட்டால்???

இந்த கேள்வி குறிக்கான விடை தான் இந்த அரிய அறிவியல் சாதனை - பன் தொடர்பு மூளை துளை. பக்கவாதம் வந்தோர், கழுத்துக்கு கீழே செயல் இழந்தவர்கள் இவர்களுக்கு உதவியாக இந்த சாதனம் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இது இன்னும் சோதனை நிலைமையில் தான் உள்ளது. என்னதான் பண்ணுவான் ஒரு மனுஷன் இந்த மாதிரி ஆயிடுச்சேன்னு புலம்ப தேவை இல்லை. இந்த கருவியின் உதவியுடன் அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் நம்மை போல எல்லவற்றையும் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள் வல்லுனர்கள்.

ஏன், எப்படி இது சாத்தியம் என்று வந்து குவியும் கேள்விகளுக்கான பதில் இதோ!!!

உடல் உறுப்புகள் கழுத்துக்கு கீழே செயல் இழந்து விட்டாலும், மூளை உறுப்பகளுக்கு கட்டளைகளை அனுப்புவதை நிறுத்துவதில்லை. ஆனாலும் கை கால்கள் வேலை செய்வதில்லை. அப்படியே அந்த கட்டளைகள் நின்று விடும், அதனால் கை கால்கள் வேலை செய்வதில்லை. உலகத்தில் இருக்கின்ற பல சோதனை குழுக்கள் இந்த மூளை கட்டளைகளை வைத்து இப்படி கை கால் வேலை செய்யாதவர்களுக்கு உதவியாக ஏதாவது ஒரு சாதனத்தை உருவாக முயற்சி செய்து வருகின்ற வேலையில் தான் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீயின் கருவி உதவியாய் இருக்கும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீ ஈடுப்பட்டிருந்த தருணத்தில் தான் அவர் பன் தொடர்பு மூளை துளைக்கான அச்சு அசலான ஒரு கருவியை உருவாகி உள்ளார். இதை மூளையில் எந்த இடத்தில் கட்டளைகள் பிறக்கின்றனவோ அந்த இடத்தில் ஊசி மூலமாக செலுத்தலாம் என்று கண்டுப்பிடித்துள்ளார். இவர் இதை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கண்டுப்பிடித்துள்ளார்.

நரம்பு அமைப்பு வழியாக தண்டுவடத்துக்கு செல்லும் இந்த கட்டளைகளை மூளை திசுக்கள் வழி எடுத்து அதை வைத்து கொண்டு உடல் தசைகளை இயக்க எத்தனித்து உள்ளனர். இந்த உணர்வீ யை மூளையில் ஊசி வழி செலுத்தி விட்ட பிறகு அதன் 50 சிறிய கூர்முனை ஈட்டிகள் நரம்பணுக்களுடன் சேர்க்கப் பட்டு விடுகின்றன. அதற்குப் பிறகு 4 சிRஇய கம்பிகள் அந்த வழியே ஏதேனும் அலைகள் வருகின்றனவா என்று பார்த்து, அப்படி வந்தால், அவற்றை கம்பியில்லா முறையில், மூளையில் ஊசி வழி ஏற்படுத்திய தடய நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றன.

பின்னர் அவை வெளியில் இருக்கின்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்க பட்டு பல இயந்திரங்களை இயக்க முடியும் என்பது ஜானின் எண்ணம்.

இந்த முயற்சியை அவர் மனிதர்கள் மீது இன்னமும் செய்து பார்க்க வில்லையாம். மூளை திசுக்களை மட்டும் வைத்து செய்து இருக்கின்றார்.

கூகுளிற்கு வயது பதினொன்று...!!!

செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

1995

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.

1996

பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.

1997

கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது.

1999

கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000

குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001

கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002

கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle) தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) குகூள் தேடு தளத்தைப் பயன் படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003

அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.

2004

மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன.

2005

கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006

யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007

டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது.

2008

கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.

2009

கூகிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோ சாப்டின் பிங்க் தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?

தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.

இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ

இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.

சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.

இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.

புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.

வீடியோவைச் சுருக்கித் தரும் MPEG4

திரைப்படங்களைக் கூட சிறிய சிப்களில் சுருக்கி எடுத்துச் செல்லும் வசதியை எம்பி4 என்னும் தொழில் நுட்பத்தில் அமைந்த கோப்புக்கள் நமக்குத் தருகின்றன. பாடல்களை எங்கும் எதிலும் எடுத்துச் சென்று கேட்பதற்கு நமக்கு எம்பி3 கோப்புக்கள் உதவுகின்றன. நக அளவு சிப்பில் நம்மால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பதிந்து எடுத்துச் சென்று கேட்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஓடியோ கோப்புக்களை சுருக்கித் தரும் எம்பி3 என்ற தொழில் நுட்பம் தான் காரணம்.

ஆனால் வீடியோ கோப்புக்கள் எப்போதும் அளவு கூடியவையாகவே இருந்து வருகின்றன. இவற்றை எப்படி ஓடியோ கோப்புக்கள் போலவே சுருக்கிப் பதியலாம் என்ற ஆவலில் நமக்குக் கிடைத்த கோப்புக்களே எம்பி4 பைல்களாகும்.

எம்பி4 கோப்புக்கள் என்பவை சுருக்கப்பட்ட வீடியோ கோப்புக்களாகும். வீடியோ கோப்புக்கள் அளவில் பெரியவை. இதனால் எடுத்துச் செல்வதில் பிரச்னை மட்டுமின்றி அவற்றை இயக்குவதிலும் பிரச்னை ஏற்படு கிறது. ஆனால் எம்பி4 வடிவில் அவை சுருக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன.

எம்பி3 கோப்புக்கள(Files) போலவே எம்பி4 பைல்களும் சுருக்கப்பட்டவையாகும். இதனால் ஒளிக் காட்சி மற்றும் ஒலியின் தரத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.. எம்பி 4 என்பதனை ஆங்கிலத்தில் MPEG4 AVC என அழைக்கின்றனர். இதில் AVC என்பது Advanced Video Codingஎன்பதன் சுருக்கம்.

எம்பி 3 பிளேயர் இருப்பது போல எம்பி 4 பிளேயர் இருக்கிறதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம், இருக்கிறது. மற்ற மீடியா பிளேயர்களைப் போலவே அதுவும் செயல்படுகிறது. மேலும் எம்பி4 பிளேயரில் பழைய எம்பி3 பைல்களையும் மற்ற வீடியோ பைல்களையும் இயக்கலாம்..

எம்பி4 தொழில் நுட்பம் பல சிறப்புகளையும் சில உறுத்தல்களையும் கொண்டுள்ளது. சிறப்பு என்று கூறுகையில் அதன் தன்மைதான் முதலில் வருகிறது. எம்பி4, 1Mbps வேகத்தில் சிறந்த டிவிடி தன்மையுடன் கூடிய எம்பி4 டிவிடிக்களை உருவாக்க முடியும். இணைய(இன்டர்நெட்) இணைப்பு இருந்தால் இந்த வேகத்தில் இவற்றை பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்திட முடியும். ஒரு சி.டி யில் 150 இற்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை எம்பி4 வடிவில் சேமிக்கலாம் என்றால் நம்புவீர்களா?.

உறுத்தல்கள் என்று எடுத்துக் கொண்டால் எம்பி4 தொழில் நுட்பத்திலேயே பல காப்புரிமை பிரச்சனைகள் இருக்கின்றன. இப்போது இணையத்திலேயே திருட்டுத்தனமாகக் பிரதி செய்யப்பட்ட திரைப்படங்கள் கிடைக்கின்றன. எம்பி4 தொழில் நுட்பம் பரவலாகும்போது விரைவாக பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதால் இந்த வகை திருட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பொறுத்திருந்துதான் இதனைப் பார்க்க வேண்டும்.

கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்

கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்கள் பரவத் தொடங்கி உள்ளன. NOKIA வகை செல்லிடப்பேசிகளில் Sympian 60 இயக்கத் தொகுப்பு உள்ள தொடர் வகை சாதனங்களில் இது ஏற்படத் தொடங்கி உள்ளது. இது "Curse of Silence," எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்கிறது.

இது பெரும்பாலும் இந்த தொடரில் 2.6, 2.8, 3.0 அல்லது 3.1 ஆகிய பதிப்புகள் இயங்கும் கையடக்க தொலைபேசிகளையே பாதிக்கிறது. இது பாதித்த பின்னர் குறுஞ்செய்திகளை (SMS) பெறுவதும் அனுப்புவதும் தடைபடுகிறது. அதே போல குறுஞ்செய்திகளுக்கும் தடை ஏற்படுகிறது. இதுவரை கிடைத்த செய்திகளின் படி இந்த வைரஸ் கீழே குறித்தபடி செயல்படுகிறது. குறைந்தது 32 எழுத்துக்கள்(Characters) கொண்ட குறுஞ்செய்தி கிடைக்கப்பெறுகிறது. இதன் முடிவில் ஒரு இடைவெளி(Space) கொடுக் கப்பட்டு ஒரு மின்னஞ்சல் முகவரி(Email) இருக்கும். இது போல குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்று Phone lock ஆவதிலிருந்து தப்பிக்க அடிக்கடி உங்கள் கைத்தொலைபேசியின் தரவுகளை (Phone Data) Sync செய்திட வேண்டும். உங்கள் தரவுகளையும் பத்திரப்படுத்த ( BackUp )வேண்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று தெரியாதவர்கள் விசைப்பலகை மூலம் *#7370# என தட்டச்சு செய்திடவும். அல்லது இன்னொரு வழியும் உள்ளது. பச்சை நிறத்தில் உள்ள Call Key ஐயும் நட்சத்திர குறியையும் மற்றும் 3 எண் விசையும்(Key) ஒரு சேர அழுத்தவும். கையடக்க தொலைபேசிகளில் மீண்டும் ஆரம்பிக்கும் (Restart) வரை அழுத்தவும்.

இது குறித்து குறிப்பாக சோதனை நடத்தியதில் இது போல தகவல்கள்(message) 11 முறை கிடைத்தவுடன் 2.8 மற்றும் 3.1 பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகள் Lock ஆகிவிடுகின்றன. குறைந்த அளவே அழைப்புக்களை(Calls) பெறும் வசதி கொண்டதாக மாறுகின்றன. 2.6 மற்றும் 3.0 பதிப்பு கொண்டுள்ள கையடக்க தொலைபேசிகள் அடுத்ததாக ஒரு செய்தியை அனுப்பியவுடன் பூட்டு(lock) ஆகின்றன. இதனை எப்–செக் யூர் நிறுவனம் சோதனை செய்து பார்த்து உறுதி செய்துள்ளது.

Web 3.0 டெக்னாலஜி


Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.

Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது

டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தரவிறக்கம் செய்ய :இங்கே சொடுக்குக

மேகக் கணினியம் (CLOUD COMPUTING)


மேகக் கணினியம் இன்னும் அதிகம் புழக்கத்துக்கு வராத ஒரு கம்ப்பியுட்டர் கலைச்சொல், CLOUD COMPUTING என்றால் பலருக்கு புரியும். தற்போது hot topic ஆக இருக்கும் கூகுள் chrome OS இன் அடிப்படை தொழில்னுட்பமே மேக கணினியம் தான். இணையத்தையும் இணையம் சார்ந்த செயலிகளையும் கொண்டு செயல்படும் தொழில்னுட்பம் என ஜல்லியடிக்காமல் சொல்வதென்றால் 50 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கி 5 ரூபாய்க்கு பேசும் தொழில்னுட்பம். அதாவது கணினிக்கோ மென்பொருளுக்கோ ஆகும் செலவுகளை குறைத்து மென்பொருள் பாவணைக்கான செலவுகளை மட்டுமே ஏற்படுத்தும் தொழில்னுட்பம்.

SaaS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As A Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம் இதை முதலில் தொடங்கியது salesforce.com எனப்படும் நிறுவனம் 1999 ல் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது பில்லியன் டாலர்களில் கொழிக்கின்றது. SaaS தான் இப்போதைக்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கும் ஜெயிக்கிற குதிரை, கூகுளில் SaaS companies என்று தட்டி பார்த்தால் தெரியும். இந்த SaaS ஐ கொண்டே மேக கணினியம் உருவாகிக் கொண்டு வருகின்றது. விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ண என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த குறித்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய்ய வேண்டும், பின் சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்க வேண்டும் license ஆக்டிவேட் பண்ண வேண்டும் வாங்கியது pirate copy யாக இருக்குமோ என கவலை பட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்த பின் அது 6 மாதமோ 1 வருடமோ கழித்து காலாவதியகும் பின்...திரும்ப விண்டோசிலிருந்து வாசிக்கவும்...CLOUD COMPUTING ல் இந்த பிரச்சினை இல்லவே இல்லை.

ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால் போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

CLOUD COMPUTING ஹார்ட்வேர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதன் security,privacy தொடர்பான விளக்கங்கள் தெளிவானவையாக இல்லை. A, B என்ற இருவர் ஒரு SaaS நிறுவன சேவைகளை பெறும் போது இருவரும் ஒரே மாதிரியாகதான் தங்களது data வை store பண்ணவோ திரும்ப பெற்றுக்கொள்ளவோ போகிறார்கள், இதில் Authentication முறை மட்டும் போதுமானதாக இருக்கபோவதில்லை என்றாலும் இணையத்துக்காகவே கணினியை பயன் படுத்துவோருக்கு இந்த தொழில்னுட்பம் வரப்பிரசாதமாக அமையலாம். என்னிடம் ஒரு பழைய PIV 3.0 கணினி ஒன்று இருக்கின்றது 3 applications க்கு மேல் ஒரேதாக இயங்க செய்தால் need for speed ல் கார் ஓட்டுவது போலவே இருக்கும் அவ்வளவு சத்தம் போடும் Processor. சாதாரணமாக கணினியில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய அதன் வேகம் குறைந்து கொண்டே செல்லும் இந்த டெக்னாலஜி கணினிகளில் அந்த பிரச்சினை இருக்காது என்றே சொல்லப்படுகிறது வாங்கிய நாள் எப்படி வேலை செய்ததோ அப்படியே தொடர்ந்து வேலை செய்யும் என்கிறார்கள். எனக்கு எனது கணினியில் கார் சத்தம் வராது என்றால் ஓகே..

கூகிள் க்ரோம் (GOOGLE CHROME)


கடந்த மாதம் கூகுள் தனது OS வெளியீட்டை அறிவித்தாலும் அறிவித்தது ஐ.டி உலகம் ஆடித்தான் போய் இருக்கின்றது, அதிலும் மைக்ரொசாஃப்ட் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டுள்ளது, பிங் யாஹுவுடனான புதிய கூட்டணி சந்தை நிலவரத்தில் மைக்ரொசாஃப்டுக்கு ஆறுதல் அளித்தாலும் தனது ஆபரேடிங் சிஸ்டம் தாணாதிக்க நிலையை தக்கவைத்து கொள்வதில் மைக்ரொசாஃப்ட் தலையை பிய்த்துக் கொள்கிறது என்பதே இந்த கூட்டணிகளின் காரணம்.

ஏற்கனவே தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்டத்தின் தொடர்ச்சியான சறுக்கல்களினால் நொந்து போயிருந்த மைக்ரொசாஃப்ட் தனது வெளிவர இருக்கும் புதிய ஆபரேடிங் சிஸ்டமான WINDOWS 7 பெரிதும் நம்பியிருக்கின்றது. வரும் அக்டோபரில் வெளிவர இருக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் 2009 டிசம்பருக்குள் 170 மில்லியன் பயனீட்டார்களை சென்றடையும் என கருத்து கணிப்புக்கள் சொன்னாலும் கூகிளின் புதிய ஆபரேடிங் சிஸ்டத்துக்கன அறிவிப்பு இந்த 170 மில்லியனில் கொஞ்சம் அல்ல நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை என்றாலும் தனது புதிய OS 2010 இன் பிற்ப்பகுதியிலேயே வெளிவரும் என்று கூகிள் அறிவித்து இருப்பது மைக்ரொசாஃப்டுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை தரலாம் கவனிக்கவும் தற்காலிக ஆறுதலே. காரணம் மைக்ரொசாஃப்ட் தனது முந்தைய பதிப்பான விஸ்டாவின் குறைகளை நிவர்த்திக்கும் முகமாக முக்கியமாக user friendliness ஐ அதிகரிக்கும் விதமாகவே WINDOWS 7 தயார் செய்து வரும் நிலையில் கூகிள் 16 அடி பாய்ந்து வருங்காலத்தில் கணனி உலகத்தையே ஆளக்கூடிய ஒரு தொழில்னுட்பமாக கருதக்கூடிய CLOUD COMPUTING(சில security issues இருந்தாலும்) எனப்படும் தொழில்னுட்ப்பத்தை கையாண்டு தனது ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது.

கூகிள் க்ரோம்(CHROME) ஆபரேடிங் சிஸ்டமானது க்ரோம் வெப் ப்ரௌசரின் மெருகூட்டப்பட்ட பதிப்பு என்றே கூகிளினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதாது டெஸ்க்டாப்பும் இணையமும் ஒன்றினைந்த ஒரு பதிப்பாக இதை கூறலாம். உங்களில் பலர் கூகிள் டெஸ்க்டாப் எனும் ஒரு மென்பொருளை பயன்படுத்தியிருப்பீர்கள் கிட்டதட்ட அது போன்றான அமைப்பே கூகிளின் புதிய OS ம். முழுக்க முழுக்க இணையத்தையே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.முதலில் netbooks எனப்படும் இணைய பயன்பாட்டிற்க்கான மடிக்கணனிகளிலேயே இது அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகிள் அறிவித்துள்ளது. கூகிள் பயன்படுத்தும் cloud computing technology யின் அனுகூலமான அம்சம் என்னவென்றால் இங்கே software requirments என்று எதுவும் கிடையாது ஒரு வேகமான இணைய தொடர்பு இருந்தால் போதும் உங்களுக்கு தேவையான எல்லா utility softwares உம் இணையத்தில் கிடைக்கும் word டில் போன்று டைப் பண்ண வேண்டுமா ஒரு குறித்த இணையத்தளம் உங்களுக்கு அந்த சேவையை தரும், games ஆ? இன்னொரு தளம், பாட்டு கேட்க வேண்டுமா அதற்கு வேறொரு தளம், சும்மா இல்லை எல்லாம் காசுக்குத்தான் இதனால் என்ன லாபம் என்றால் உங்களுக்கு சிறிய வேலைக்கு மட்டுமே தேவைப்படும் ஒரு மென்பொருளை நிரந்தரமாக பெரிய விலை கொடுத்து வாங்க தேவை இல்லை pirate software பிரச்சினை இல்லை தேவையான நேரத்தில் பாவித்து விட்டு அதற்கான பணத்தை இணையத்தில் செலுத்தினால் போதும், குறித்த மென்பொருளை கணனியில் நிறுவும் கஷ்டங்கள் இல்லை உதாரணமாக games க்கான VGA card போன்ற தொல்லைகள் இல்லை. இதனால் வன்பொருளுக்கான பண விரயம் இல்லை all you need is a fast reliable internet connection. ஆனாலும் இந்த cloud computing technology யில் சில பல security, privacy தொல்லைகள் இருக்கும் போலதான் இருக்கின்றது(data மற்றும் softawres ஒரு server போன்ற அமைப்பில் இருப்பதால்) எது எப்படியோ windows இனிமேல் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும் அலுவலகங்களில் லெட்டர் அடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு technology யாக கூட மாறாலாம்..

லேப்டாப் தயாரிக்க மூங்கில் மரம் பயன்படுகிறது

பிளாஸ்டிக், உலோகத்திற்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி மடிக்கணினிகள் (லேப்டாப்) தயாரிக்க தைவான் நாட்டு கம்பயூட்டர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய மூங்கில் மடிக்கணினியை உருவாக்கியுள்ள அசுஸ்டெக் நிறுவனம், அதற்கு அசுஸ் ஈகோ புக் (Asus Eco Book) என பெயரிட்டுள்ளது.

மடிக்கணினி திரை மற்றும் மைக்ரோ பிராசசரில் ஏற்படும் வெப்பத்தை தங்கக் கூடிய தன்மை மூங்கில்-க்கு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது முற்றிலுமான வெற்றியடைந்த பின்னரே வர்த்தக ரீதியாக மூங்கில் மடிக்கணினிகள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் கணினி தொடர்பான உபகரணங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், மூங்கிலை கொண்டு மடிக்கணினி தயாரிக்கும் பணியை அசுஸ்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனித அறிவை மிஞ்சும் கணணி 2020குள் வரும்

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்பியூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார். 'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.

தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.

மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கூகுள் எர்த்துக்குப் போட்டியாக இஸ்ரோவின் 'புவன்'!

கூகுள் எர்த் போன்ற இணையதளம் ஒன்றை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதற்கு புவன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 90வது பிறந்த நாளையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானியல் கழகத்தில் நடந்த புவன் தொடக்க விழாவில் நாட்டின் முன்னணி விண்வெளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

ஏஜென்சியின் இயக்குநர் வி.ஜெயராமன் கூறுகையில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தத் திட்டத்திற்காக, இஸ்ரோவிலிருந்து இளம் விஞ்ஞானிகள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பணியின் தொடக்கம் முதல் முடிவு வரை அயராமல் பாடுபட்ட அந்தக் குழு தற்போது வெற்றிகரமாக புவனை உருவாக்கியுள்ளது.

இந்திய செயற்கைக்கோளான ரிசோர்ஸ்சாட்-1 போன்றவற்றிலிருந்து கிடைத்த டேட்டாக்களைப் பயன்படுத்தி புவன் உருவாக்கப்பட்டுள்ளது. புவன் என்றால் சமஸ்கிருத மொழியில் பூமி என்று பொருள்.

இந்த இணையதளத்தில், பூமியில் எங்கு ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் உள்ளது. அதேசமயம், பொது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் காப்போம் என்றார்.

இஸ்ரோ தலைமை செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், கூகுள் எர்த்துடன் ஒப்பிடுகையில், புவன் சிறப்பானது. இந்திய நகரங்கள் [^] குறித்த அனைத்துத் தகவல்களையும் இது தரும். பயன்பாட்டாளர்களுக்கு இந்த தளம் மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என்றார்.

கூகுள் எர்த் தளத்தில், 200 மீட்டர் வரைக்கும்தான் 'ஜூம்' செய்ய முடியும். அதேசமயம், புவனில் 10 மீட்டர் வரை செல்ல முடியும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புவன் சாப்ட்வேரை bhuvan.nrsc.gov.in இணையத் தளத்தில் டெளன்லோட் செய்யலாம்.

ஆனால், இஸ்ரோவின் இந்தத் தளத்திலிருந்து புவனை டெளன்லோட் செய்வதற்கு உங்களுக்கு ரொம்பப் பொறுமை வேண்டும். அதிவேக பிராண்ட் பேண்ட் லைனிலேயே இதை டெளன்லோட் செய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகிறது. இடையில் சர்வர் 'உட்கார்ந்துவிட்டால்' இன்னும் அரை மணி நேரமும் ஆகும்.

இன்று பகல் முழுவதும் இந்த இணையத் தளம் ஓபன் ஆகவே இல்லை. அதைவிடக் கொடுமை இந்த புவன் குறித்து இஸ்ரோ இணையத் தளத்தில் எந்தத் தகவலும் இல்லை என்பது தான்.

மால்வேர் புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை

அண்மையில் அருமையான ஓர் இணைய தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கம்ப்யூட்டரையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நம்மை அப்டேட் செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன்.

InternationalMalwareThreatCenter என அழைக்கப்படுகிறது. இது இணையச் செயல்பாட்டினை மானிட்டர் செய்திடும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கம்ப்யூட்டரை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர் புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

ஒவ்வொரு மோசமான மால்வேர் புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத் தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. பிஷ்ஷிங் மற்றும் வேறு வகைகளில் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவா ன டொமைன் பெயரையும் குறிப்பிடுகிறது.

இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!

எனவே தங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குக

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில் ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும்.






















விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம் மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக் கொள்ளலாம்.

மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம் அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை

ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.

இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்