ஐம்பதாவது அகவையில் நாசா

அமெரிக்காவின் விண்வெளிப் பயணத்தை முன்னேடுத்துச் செல்லும் நாசா எனப்படும் அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிலையம் துவக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் ரஷ்யாவின் பக்கமாகவும், அமெரிக்காவின் பக்கமாகவும் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற நிலையில், இந்த இரு நாடுகளும் தங்கள் வல்லமையை பறைசற்ற இராணுவத்தையும், தொழில்நுட்பத்தையும் உபகரணங்களாகப் பயன்படுத்தின.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் விண்வெளியிலும் பெரிய அளவில் வெளிப்பட்டன. ஸ்புட்னிக் 1 என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக் கோளை அப்போதைய சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்ணில் ஏவியது.


விண்வெளி முயற்சிகளில் முன்னணியில் நாசா திகழ்கிறது. நவம்பர் 3 ஆம் திகதி ஸ்புட்னிக் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த அமெரிக்கா எடுத்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது,

1957 ஆம் ஆண்டின் டிசம்பர் 6 ஆம் திகதியன்று அமெரிக்காவின் செயற்கைக் கோள் ராக்கெட் ஏவுதளத்திலேயே வெடித்து சிதறியது.

இந்த நிலையில் 1958 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதியன்று அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜசன்ஹோவர் நேஷனல் ஏரோநாடிக்ஸ் அண்ட் ஸ்போஸ் ஆக்ட் என்ற சட்டத்தை கைச்சாத்திட்டார். இந்த சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பான நாசா அதன்பிறகு பல விண்வெளி சாதனைகளுக்கு பொறுப்பானது.

1 comment:

ராஜ நடராஜன் said...

தகவலுக்கு நன்றி.அப்படியே பிரேம்ஜி யோட பதிவுகளையும் ஒரு பார்வை பாருங்கள்:)