முதலிடத்தை இழக்கும் நிலையில் பெடரர்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டியின் 3 ஆவது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர் குரோஷியாவின் இவோகர்லோவிக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளாக டெனிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்த ரோஜர் பெடரர் அந்த இடத்தை நழுவவிடவுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டெனிஸ் 3 ஆவது சுற்று ஆட்டத்தில் கர்லோவிக்கிடம் ரோஜர் பெடரர் 76, 46, 76 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிச் சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் வெற்றி பெற்றால் அவர் பெடரரிடமிருந்து தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பருவத்தில் அதிகமான ஏஸ்களை அடித்து சேர்வீஸ்களில் வெற்றி பெற்ற கர்லோவிக் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெடரருக்கு கூடுதல் நிர்ப்பந்தங்களையளித்தார்.

No comments: