8 அடி உயர குரங்கு மனிதன்

கனடாவில் 8 அடி உயர குரங்கு மனிதன் நடமாட்டத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கனடாவின் ஒட்டாரி யோவில் உள்ள கிராமப்பகுதியில் வித்தியா சமான ஒருமிருகம் நடமாடு வதாக பீதி ஏற்பட்டது. 8அடி உயரத்துக்கு இருக்கும் அந்த மிருகம் பார்ப்பதற்கு குரங்கு போல் இருக்கிறது. கறுப்பு நிறத்தில் முடியும் உள்ளது. ஆனால் அதன் நடவடிக்கைகள் மனிதனை போலவே உள்ளது.

குரங்கு மனிதன் என்று இதை கிராம மக்கள் அழைக்கிறார்கள். எப்போதாவது கிராமப் பகுதிகளில் நடமாடும் இந்த குரங்கு மனுதனை பார்த்ததாகவும் கிராம மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். மனிதர்களை பார்த்ததும் இது காட்டுக்குள் ஓடிச்சென்று விடுகிறது.

அதன் கால் தடங்களை விலங்கியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். குரங்கு மனிதனால் ஆபத்து ஏற்படுமோ என்ற பீதியில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தயங்குகிறார்கள்.

No comments: