ஆகஸ்ட் 27ஆம் திகதி வானத்தில் இரு சந்திரன்கள்?

செவ்வாய்க் கிரகமானது எதிர்வரும் 27ஆம் திகதி பூமிக்கு மிக நெருங்கி வரவுள்ளதாகவும் அது பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டாவது சந்திரன் போன்று தோற்றமளிக்கும் எனவும் அராபிய பத்திரிகைகள் அண்மையில் அறிக்கையிட்டிருந்தன.

இந் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை நிபுணர்கள் மேற்படி எதிர்வு கூறல் அறிக்கைகளை நிராகரித்துள்ளனர். எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க் கிரகமானது வானத்தில் பெரிய முழுநிலவு போன்று தோற்றமளிக்கும் எனவும் அதனால், வானத்தில் இரு சந்திரன்களைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் எனவும் இணையத் தளங்கள் பலவற்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாயானது ஒவ்வொரு 780 நாட்களுக்கும் ஒரு தடவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கையில் பிரகாசமான தோற்றத்தை வெளிப்படுத்துவது வழமையாகவுள்ளது என எமிரேட்ஸ் வானிலை சபையின் இஸ்லாமிய சந்திர அவதான திட்ட தலைவர் மொஹமட் சொயுகத் அவதா தெரிவித்தார்.

மேற்படி செவ்வாய்க் கிரகமானது இவ்வருடம் மனித வெற்றுக் கண்ணுக்கு முழு நிலவு அளவு தோன்றுவது சாத்தியமில்லை எனக்குறிப்பிட்ட அவர், 2287ஆம் ஆண்டில் அத்தகைய இரு சந்திரத் தோற்றப்பாடு வானில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

No comments: