இளைய தலைமுறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண்

இளைய தலைமுறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் நிஷிதா ஷா, போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வாஷிங்டன் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷிதா ஷா (28) இடம்பிடித்து உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம், தாய்லாந்தில் வசித்து வருகிறது. அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் அவ்வப்போது கோடீஸ்வரர்கள், அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது அடுத்த தலைமுறையில் மகா கோடீஸ்வரர்களாக இருக்கப் போகிறவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் நிஷிதா ஷா இடம்பெற்றுள்ளனர். மேலும் கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், பேபால் நிறுவனத்தை ஆரம்பித்த எலோன் முஸ்க், ஹாலிவுட் நடிகர் டைலர் பெர்ரி, மிக்சி இணையதள நிறுவனர் கென்ஜி கஷாரா, பிபோ இணையத்தின் மைக்கேல், ஜாச்சி பர்ச் உட்பட பலர் இடம்பெற்று உள்ளனர். இப்போதைய உலக மகா கோடீஸ்வரர்கள் வயதானவர்களாக உள்ளனர்.

1,125 கோடீஸ்வரர்களின் சராசரி வயது 61. இந்நிலையில்தான் இந்த பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டு உள்ளது. நிஷிதா ஷா, தாய்லாந்தின் ஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது தந்தை ஆரம்பித்த நிறுவனம் இது. இப்போது மொத்தம் 40 நிறுவனங்கள் உள்ளன. இவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.1,612 கோடி. எதிர்காலத்தில் இது பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கப்பல்கள், துணி என ஏகப்பட்ட துறைகளில் கொடிகட்டிப் பறக்கின்றனர்

No comments: