எத்தனை பார்வை...!

கிட்டப் பார்வை
தூரப் பார்வை
இரண்டு மட்டுமே
நான் அறிந்த பார்வை
ஆனால் பாவையே
உனக்குத் தான் எத்தனை பார்வை
கணவரைப் பார்க்கையில்
காதல் பார்வை
கனி மழலையைப் பார்க்கையில்
பாசப் பார்வை
உயிர்களைப் பார்க்கையில்
கருணைப் பார்வை
கயவரைப் பார்க்கையில்
கனல் பார்வை
பார்வையில் இத்தனை
வகைகளென்று - உனை
பார்த்த பின்பே நான்
அறிந்ததடி.

No comments: