செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம்

அமெரிக்காவின் "பீனிக்ஸ்' விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம் இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் "பீனிக்ஸ்'விண்கலம் செலுத்தப்பட்டது. பத்து மாத கால பயணத்திற்கு பின், கடந்த மே மாதம் செவ்வாய் கிரகத்தில் பீனிக்ஸ் தரை இறங்கியது.

விண்கலத்தில் உள்ள அதி நவீன கேமரா மூலம் புகைப்படங்கள் எடுத்து, நாசா விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள, நிலப் பரப்புகள் ஏற்கனவே படம் பிடித்து நாசாவிற்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் செவ்வாயில் இளஞ் சிவப்பு நிறத்தில் தூசுப் படலம் இருப்பதை, பீனிக்ஸ் படம் எடுத்து அனுப்பியுள்ளது. "பீனிக்ஸ் அனுப்பியுள்ள புகைப்படங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'என்று, நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்

No comments: