மகளிர் கால்பந்தாட்டம்; அமெரிக்காவுக்கு தங்கம்

ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் கால்பந்தாட்டத்தில் பிரேஸிலை 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா கூடுதல் நேர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வெற்றியை ஈட்டியது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும், தென்னமெரிக்கா நாடான பிரேஸிலுடன் மோதிய அமெரிக்கா வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பிரேஸில் சிறப்பாக விளையாடி அமெரிக்காவுக்கு கடும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் அமெரிக்க அணி சமாளித்து ஆடி கூடுதல் நேர வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றிபெற்றது.

மகளிர் கால்பந்தில் ஜேர்மனி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்தப் பதக்கத்திற்காக ஜப்பானுடன் மோதிய ஜேர்மனி, 20 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

No comments: