அவள்

பாலைவனம் என்றாலும்
பயணம் செய்வேன்
பாதை காட்டுவது
அவளாக இருக்க வேண்டும்...
கொசுக்கடியில் கூட நிம்மதியாக
உறங்குவேன்
கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும்
கடுமையாக உழைக்க காத்து கிடக்கிறேன்
ஊதியம் தருவது
அவளாக இருக்க வேண்டும்
வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன்
வாழ்க்கைத் துணைவி
அவளாக இருக்க வேண்டும்!

No comments: