அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி காலிறுதியில் நடால், பிஷ், முர்ரே

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்க வீரர் மார்ட்டி பிஷ், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இதுவரை அமெரிக்க ஓப்பன் கிராண்ஸ்லாம் டெனிஸ் தொடரில் காலிறுதியைத் தாண்டிச் செல்லாத தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவின் சாம் குவெர்ரியை 62, 57, 76, 63 என்ற செட்கணக்கில் போராடி வீழ்த்தி காலிறுத்திக்கு முன்னேறினார்.

2 ஆவது செட் தவிர மற்ற செட்களில் நடாலின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் 41 முறை அவர் தவறுகள் செய்தார். ஆனால் முதல் சேர்வ் வின்னர்களும் குவெர்ரியின் சேர்வை முறியடித்து பெற்ற வின்னர்களும் நடாலின் வெற்றியை உறுதிசெய்தது. மற்றொரு 4 ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மார்டி பிஷ் 32 ஆம் தரவரிசையில் உள்ள பிரான்ஸ் வீரர் காயெல் மான் பில்ஸ் என்பவரை 75,62,62 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

6 ஆம் தரவரிசையில் உள்ள பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே 10 ஆம் தரவரிசையில் உள்ள சுவிஸ் வீரர் வார்வின்காவை 61, 63, 63 என்ற நேர்செட்களில் வீழ்த்தி முதன் முறையாக அமெரிக்க ஓப்பன் டெனிஸ் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். மற்ற 4 ஆவது சுற்று ஆட்டத்தில் 17 ஆம் தரவரிசையில் உள்ள ஆர்ஜென்ரீனாவின் இளம் வீரர் மார்டின் டெல் போர்ட்டோ ஜப்பானிய இளம் வீரர் கெய் நிஷிகோரியை 63,64,63 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

No comments: