65 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பவளப் பாறை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியாவில் 65 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பவளப் பாறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள பிளின்டர்ஸ் மலைத் தொடரில் இந்தப் பாறை அமைந்துள்ளது. இதை மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த அரிதான பவளப் பாறை நீண்ட ஆண்டுகள் கடலுக்கு அடியில் இருந்துள்ளது. கடந்த காலங்களில் பூமியில் ஏற்பட்ட பல்வேறு பருவமாற்றங்களையும் இது சந்தித்துள்ளது.

இதனால், இதன் மூலம் கடந்த காலங்களில் பூமியில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்கள் குறித்தும் பவளப்பாறைகளின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அறிய இயலுமென அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதி காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் வாழ்க்கை குறித்தும் இந்த பாறை மூலம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: