"ஸ்ரெய்ன்ஸ்' விண்கல்லை கடந்து சென்ற "ரொஸேதா' விண்கலம்

ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தின் ஆட்களற்ற பூ€˜ரொஸேதாபூ€ஙு விண் பரிசோதனை கூடமானது ஸ்ரெய்ன்ஸ் விண்கல்லை 800 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து அந்த விண்கல் தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

வியாழக் கிரகத்துக்கு அப்பாலுள்ள நீள் வட்டப் பாதையை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் அணுகுவதை இலக்காகக் கொண்டு 2004 மார்ச் மாதம் 2 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்ட ரொஸேதா விண்கலமானது, கடந்த வெள்ளிக்கிழமை பூமியிலிருந்து 360 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விண்கலம் 5 கிலோ மீற்றர் அகலமான ஸ்ரெய்ன்ஸ்விண்கல்லை படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. 600 மில்லியன் ஸ்ரேலிங் பவுன் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், 2010 ஆம் ஆண்டு ஜுன் 10 ஆம் திகதி லுதெஷியா விண்பாறைக்கு 3000 கிலோமீற்றர் தொலைவில் பயணிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது

No comments: