ஐரோப்பிய விண்கலம் பூமியில் விழுகிறது

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவையானவற்றை கொண்டு சென்ற ஐரோப்பிய விண்கலமான ஜுலியஸ் வெர்னோ எதிர்வரும் 29 ஆம் திகதி பூமியில் விழுகிறது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விண்வெளிசென்ற 22 தொன் நிறையுடைய இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழையும் போது நெருப்புக் கோளமாக மாறி பசுபிக் பெருங்கடல் பகுதியில் விழும். இவ்வாறு விழுவதன் மூலம் எந்தவித கெடுதலும் ஏற்படாதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: