சாதனைக்கு காத்திருக்கும் பெடரர்

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓப்பன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்கு முறை பட்டம் வென்ற ரோஜர் பெடரர், தனது 30 ஆவது தொடர் வெற்றியை பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற 3 ஆவது சுற்று ஆட்டத்தில் செக். குடியரசின் ராடிக் ஸ்ரீபானிக்குடன் மோதிய பெடரர், 63, 63, 62 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்வரை தரவரிசையில் முதலிடத்திலிருந்து வந்த பெடரர் இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இன்னும் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றால் அவர் பீற் சாம்ப்ராசுக்கு இணையாகத் திகழ்வார். மேலும், தற்போது நடைபெற்றுவரும் போட்டியில் இவர் பட்டம் வென்றால் 5 முறை அமெரிக்க ஓப்பன் டெனிஸ் பட்டத்தை வென்று, 1924 ஆம் ஆண்டு சாதனை செய்த பில் டில்டன் சாதனையை சமன் செய்வார்.

4 ஆவது சுற்றில் பெடரர் ரஷ்யாவின் இகோர் ஆன்ட்ரீவ் அல்லது ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவுடன் மோதுவார்.

No comments: