2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 7 அடி வரை உயரலாம்

கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, 4500 ஆண்டுகள் பழைமையான "மார்கம்' பனிப்பறையில் 19 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2100க்குள் கடல் நீர் மட்டம் 7 அடி உயரும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

சுற்றுச் சூழல் பாதிப்பு, உலகம் வெப்ப மயமாதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. ஆனாலும் வெப்ப மயமாதலை தடுக்க முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதிப்பால் காற்று மண்டலம் வெப்பமாகி பணி மலைகள் உருகத் தொடங்கிவிட்டன.கிரீன்லாந்து, அன்டார்டிக் கடல் பகுதியில் பனி மலைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 7 அடி வரை உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடல் நீர் மட்டம் உயருவதால் கடலோர பகுதிகளில் பல்வேறு நாடுகள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேற்படி பனிப்பாறைப் பகுதியானது கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் திடீரென மாயமாகியுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கனடாவின் ஒன்டாறியோவிலுள்ள ரென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேசமயம் "வார்ட் ஹன்ட்' பனிப்பாறை தொடர்ந்து உருகி சிதைவடைந்து வருவதாக இவ்விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் இந்த நிலைமை கவலை அளிப்பதாக டென்மார்க் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த மாறுபாடுகளினால் ஆர்டிக் கடல் ஒட்டிய பிரதேசங்களில் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் டென்மார்க் மற்றும் அதன் அண்டை நாடுகளும் உதவ முன்வந்துள்ளது. மேலும் 170 சதுர மைல் பரப்பளவு கொண்ட "வார்ட் ஹன்ட்' பனிப்பாறையில், 7 சதுர மைல் பரப்பளவான பகுதி கடந்த மாதம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: