குறட்டை விடும் குழந்தைக்கு ஆபத்து

குழந்தைகளின் தூக்கம் குறித்து பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். தூக்கத்தில் குறட்டை விடும் குழந்தைகள் மற்றும் குறட்டை விடாத குழந்தைகளிடம் நடந்த இந்த ஆராய்ச்சியில் இக்குழந்தைகளின் கவனிக்கும் திறன், மூளை செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் குறட்டை காரணமாக நிம்மதியற்ற தூக்கமுடைய குழந்தைகளின் கற்றல் திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.இரவு நேரங்களில் குறட்டை விடும் குழந்தைகள் மூச்சு விடுவதில் ஏற்படும் இந்த சிரமத்தால் அவர் களுடைய மூளைத்திறன் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

குறட்டை விடும் பிரச்சினையை நீக்க நாக்கின் அடிப்பகுதியில் உள்ள சதையை நீக்கும் அறுவை சிகிச்சை செய்த பிறகு அக்குழந்தைகளின் கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது இந்த ஆராய்ச் சியின் முடிவில் தெரிய வந்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments: