கல்லிலே கலைவண்ணம்

கம்போடியாவின் நாம்பென் நகரில் இருந்து 245 கி.மீ. தொலைவில் உள்ளது பரேக் விகார் மாநிலம். அங்கு பரேக் விகார் என்ற 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, புராதன பெருமை பெற்ற கோயில் உள்ளது. தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜன் காலத்தில் படைகளுடன் சென்றவர்கள் அங்கேயே தங்கிவிட்டதாகச் சொல்வார்கள்.

தமிழகக் கோயில்கள் சாயலில் கட்டப்பட்ட தாய்லாந்து எல்லையை ஒட்டி அமைந்துள்ள இதை உலக முக்கிய சின்னமாக அறிவிக்க கம்போடிய அரசு ஆதரவு திரட்டி வருகிறது. இதுவரை அதன் திட்டத்தை ஆதரித்த தாய்லாந்து, இப்போது தனது முடிவைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. கலைநயங்களுடன் சிதிலமடைந்து நிற்கும் கோயில் இது.

No comments: