நாயை கடித்து குதறிய 11 வயது சிறுவன்

இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அங்குள்ள பெலோ நகரில் 11 வது சிறுவன் கேபிரியேல் தனது மாமாவின் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது பயங்கரமாக குரைத்தபடி கேபிரியேல் மேல் பாய்ந்தது. `பிட்டி புல்' ரகத்தை சேர்ந்த ஒரு நாய்.

அது கேபிரியேலை கீழே தள்ளி பிராண்டியது.நிலை தடுமாறிய கேபிரி யேல் சுதாரித்துக் கொண்டு இந்த நாயை பிடித்து அதன் கழுத்தில் பலமாக கடித்து குதறினான். விடாமல் அந்த சிறுவன் கடித்து குதறியதில் அவனது பல் நாயின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் மற்றவர்கள் தனித்தனியாக பிரித்தனர்.

அந்த சிறுவனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு 5 தையல் கள் போடப்பட்டுள்ளன. அந்த நாயும் ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

No comments: