உலகத்தை காப்பாற்றுவதற்கு 100 மாதங்கள் மட்டுமே அவகாசம்

அபாயமிக்க பூகோள வெப்பமாதலிலிருந்து பூமியைப் பாதுகாக்க, 100 மாத கால அவகாசம் மட்டுமே உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதன் பிரகாரம் கால நிலை மாற்றம், எரிபொருள் மற்றும் நிதி போன்ற தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய உடன்படிக்கையொன்று ஏற்படுத்திக் கொள்ளப்படுவது அவசியரஔமன "கிறீன் நியூ டீல்' குழு என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இவ்வமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்கள் மீதான பிரதான முதலீடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்கள் என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

No comments: