தொலைதூரம் செல்வது ஏனோ...?



கண்ட நாள் முதலாய்
என் நினைவினில் நிற்கின்றாயே...!!!
கண் பார்த்துக் கதைக்க முடியா
தொலைதூரம் செல்வது ஏனோ...?

முகம் முன்னே நிற்கையில்
அருகாமை இருந்த நீ...!!!
அகம் உள்ளே வந்ததும்
தொலைதூரம் செல்வது ஏனோ...?

உன்னுயிராய் இருக்கையில்
மிகக் கிட்ட இருந்த நீ..!
என்னுயிராய் வந்ததும்
தொலைதூரம் செல்வது ஏனோ...?

கண் திறந்து நடமாடும் போதும்
கண் மூடி துயில் கொள்கையிலும்
கண்ணெதிரே தெரிந்த நீ
தொலைதூரம் செல்வது ஏனோ...?

No comments: