மாலைப்பொழுதினில்...!!!


மாலைப்பொழுதினில்
கதிரவனின் சிறுகதிர் வீச்சில்
மழைநாள் வானவில் போல்
கண்முன்னே சென்றாயடி...!!!

வீதியுலா நீ வரும்போது
உன் வதனம் காண்கையில்
எண்ணற்ற மகிழ்ச்சி
என் முகமதில் வீசுதடி

சிறிதானதொரு புன்முறுவல்
சலனமில்லாததொரு பார்வை
பெளர்ணமி போன்ற உன் வதனம்
மகிழ்வினைத் தருகுதடி

No comments: