மனதைப் படிக்கும் மூளை துளை
























மூளை சொல்ல நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகள் தான் எல்லாமே இல்லையா? மூளையிலிருந்து புறப்படும் எண்ண அலைகள் தான் நம்முடைய எல்ல செயல்களுக்கும் காரணம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே! மூளை என்னதான் கட்டளை அனுப்பினாலும் அதை உள் வாங்கி செயல்படுத்த நம்முடைய மற்ற உறுப்புகள் ஒத்துழைத்தால் தான் எல்லா வேலைகளும் சரியான முறையிலே நடை பெறும். ஒரு வேலை அப்படி அந்த கட்டளைகளை செயல் படுத்த கூடிய உறுப்புகள் செயல் இழந்து விட்டால்???

இந்த கேள்வி குறிக்கான விடை தான் இந்த அரிய அறிவியல் சாதனை - பன் தொடர்பு மூளை துளை. பக்கவாதம் வந்தோர், கழுத்துக்கு கீழே செயல் இழந்தவர்கள் இவர்களுக்கு உதவியாக இந்த சாதனம் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இது இன்னும் சோதனை நிலைமையில் தான் உள்ளது. என்னதான் பண்ணுவான் ஒரு மனுஷன் இந்த மாதிரி ஆயிடுச்சேன்னு புலம்ப தேவை இல்லை. இந்த கருவியின் உதவியுடன் அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் நம்மை போல எல்லவற்றையும் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள் வல்லுனர்கள்.

ஏன், எப்படி இது சாத்தியம் என்று வந்து குவியும் கேள்விகளுக்கான பதில் இதோ!!!

உடல் உறுப்புகள் கழுத்துக்கு கீழே செயல் இழந்து விட்டாலும், மூளை உறுப்பகளுக்கு கட்டளைகளை அனுப்புவதை நிறுத்துவதில்லை. ஆனாலும் கை கால்கள் வேலை செய்வதில்லை. அப்படியே அந்த கட்டளைகள் நின்று விடும், அதனால் கை கால்கள் வேலை செய்வதில்லை. உலகத்தில் இருக்கின்ற பல சோதனை குழுக்கள் இந்த மூளை கட்டளைகளை வைத்து இப்படி கை கால் வேலை செய்யாதவர்களுக்கு உதவியாக ஏதாவது ஒரு சாதனத்தை உருவாக முயற்சி செய்து வருகின்ற வேலையில் தான் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீயின் கருவி உதவியாய் இருக்கும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீ ஈடுப்பட்டிருந்த தருணத்தில் தான் அவர் பன் தொடர்பு மூளை துளைக்கான அச்சு அசலான ஒரு கருவியை உருவாகி உள்ளார். இதை மூளையில் எந்த இடத்தில் கட்டளைகள் பிறக்கின்றனவோ அந்த இடத்தில் ஊசி மூலமாக செலுத்தலாம் என்று கண்டுப்பிடித்துள்ளார். இவர் இதை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கண்டுப்பிடித்துள்ளார்.

நரம்பு அமைப்பு வழியாக தண்டுவடத்துக்கு செல்லும் இந்த கட்டளைகளை மூளை திசுக்கள் வழி எடுத்து அதை வைத்து கொண்டு உடல் தசைகளை இயக்க எத்தனித்து உள்ளனர். இந்த உணர்வீ யை மூளையில் ஊசி வழி செலுத்தி விட்ட பிறகு அதன் 50 சிறிய கூர்முனை ஈட்டிகள் நரம்பணுக்களுடன் சேர்க்கப் பட்டு விடுகின்றன. அதற்குப் பிறகு 4 சிRஇய கம்பிகள் அந்த வழியே ஏதேனும் அலைகள் வருகின்றனவா என்று பார்த்து, அப்படி வந்தால், அவற்றை கம்பியில்லா முறையில், மூளையில் ஊசி வழி ஏற்படுத்திய தடய நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றன.

பின்னர் அவை வெளியில் இருக்கின்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்க பட்டு பல இயந்திரங்களை இயக்க முடியும் என்பது ஜானின் எண்ணம்.

இந்த முயற்சியை அவர் மனிதர்கள் மீது இன்னமும் செய்து பார்க்க வில்லையாம். மூளை திசுக்களை மட்டும் வைத்து செய்து இருக்கின்றார்.

1 comment:

Anonymous said...

nice pix and blog..