கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்

கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்கள் பரவத் தொடங்கி உள்ளன. NOKIA வகை செல்லிடப்பேசிகளில் Sympian 60 இயக்கத் தொகுப்பு உள்ள தொடர் வகை சாதனங்களில் இது ஏற்படத் தொடங்கி உள்ளது. இது "Curse of Silence," எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்கிறது.

இது பெரும்பாலும் இந்த தொடரில் 2.6, 2.8, 3.0 அல்லது 3.1 ஆகிய பதிப்புகள் இயங்கும் கையடக்க தொலைபேசிகளையே பாதிக்கிறது. இது பாதித்த பின்னர் குறுஞ்செய்திகளை (SMS) பெறுவதும் அனுப்புவதும் தடைபடுகிறது. அதே போல குறுஞ்செய்திகளுக்கும் தடை ஏற்படுகிறது. இதுவரை கிடைத்த செய்திகளின் படி இந்த வைரஸ் கீழே குறித்தபடி செயல்படுகிறது. குறைந்தது 32 எழுத்துக்கள்(Characters) கொண்ட குறுஞ்செய்தி கிடைக்கப்பெறுகிறது. இதன் முடிவில் ஒரு இடைவெளி(Space) கொடுக் கப்பட்டு ஒரு மின்னஞ்சல் முகவரி(Email) இருக்கும். இது போல குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்று Phone lock ஆவதிலிருந்து தப்பிக்க அடிக்கடி உங்கள் கைத்தொலைபேசியின் தரவுகளை (Phone Data) Sync செய்திட வேண்டும். உங்கள் தரவுகளையும் பத்திரப்படுத்த ( BackUp )வேண்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று தெரியாதவர்கள் விசைப்பலகை மூலம் *#7370# என தட்டச்சு செய்திடவும். அல்லது இன்னொரு வழியும் உள்ளது. பச்சை நிறத்தில் உள்ள Call Key ஐயும் நட்சத்திர குறியையும் மற்றும் 3 எண் விசையும்(Key) ஒரு சேர அழுத்தவும். கையடக்க தொலைபேசிகளில் மீண்டும் ஆரம்பிக்கும் (Restart) வரை அழுத்தவும்.

இது குறித்து குறிப்பாக சோதனை நடத்தியதில் இது போல தகவல்கள்(message) 11 முறை கிடைத்தவுடன் 2.8 மற்றும் 3.1 பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகள் Lock ஆகிவிடுகின்றன. குறைந்த அளவே அழைப்புக்களை(Calls) பெறும் வசதி கொண்டதாக மாறுகின்றன. 2.6 மற்றும் 3.0 பதிப்பு கொண்டுள்ள கையடக்க தொலைபேசிகள் அடுத்ததாக ஒரு செய்தியை அனுப்பியவுடன் பூட்டு(lock) ஆகின்றன. இதனை எப்–செக் யூர் நிறுவனம் சோதனை செய்து பார்த்து உறுதி செய்துள்ளது.

No comments: