நிலாவை நெருங்கியது சந்திராயன் விண்கலம்

அடுத்த வாரம் நிலாவில் மோதி சோதனை


நிலாவை ஆராய்ச்சி செய் வதற்காக கடந்த மாதம் 22-ந்தேதி சந்திராயன்-1 என்ற செயற்கை கோளை இந்தியா விண்ணில் ஏவியது.பூமியில் இருந்து நிலா சுமார் 3லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

முதலில் பூமியின் நீள் வட்ட சுற்றுப்பாதையில் சந்திராயன் சுற்றி வந்தது. அதன் பிறகு சந்திராயனை கொஞ்சம், கொஞ்சமாக விண்ணில் இந்திய விஞ்ஞானிகள் உயர்த் தினார்கள். பெங்களூர் அருகே பையாலு என்னும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி சந்திராயன் இயங்கி வருகிறது.

இது வரை 5 தடவை சந்திராயனை விண்ணில் தூரத்தை அதிகப்படுத்தி நிலா அருகில் நெருங்கச் செய்துள்ளனர். இன்று மதியம் வரை நிலாவில் இருந்து 500 கி.மீ. மற்றும் 7500 கி.மீ. தொலைவிலான நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திராயன் சுற்றி வந்தது. அதை நிலா அருகில் கொண்டு செல்லும் பணிகள் நேற்றிரவு தொடங்கியது.

இன்று மாலை சந்தி ராயன் செயற்கைகோள் நிலா அருகில் 100 கி.மீ தொலைவுக்குள் கொண்டு செல்லப்படும். இன்று மாலை 5.30 மணி முதல் 6மணிக்குள் இந்த பணி நடைபெறும். இது வரை சந்திராயன் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நீள்வட்ட பாதையில் சுழன்று கொண்டிருந்தது.

இன்று மாலை சந்திராயன் செயற்கை கோளின் ஓட்ட வேகத்தை விஞ்ஞானிகள் சற்று கட்டுப்படுத்துவார்கள். அதன் பிறகு அதை லாவகமாக நிலாவின் மிகநெருக்கமான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வார்கள்.அந்த சமயத்தில் நிலா விண் ஈர்ப்பு விசை சக்திக்கு ஏற்ப சந்திராயனை சுற்றவிட வேண்டும். இதற் கான பணியை இன்று மாலை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.

இதில் நூறில் ஒரு புள்ளி தவறு ஏற்பட்டாலும் சந்திராயன் ஆராய்ச்சி பணிகளில் பிரச்சினை ஏற்பட்டு விடும். எனவே இன்று மாலை நிலா அருகில் சந்திராயனை கொண்டு செல்லும் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நிலாவின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப சந்திரா யனை குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறுத்த விஞ்ஞானிகள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தால் பையாலுவில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு அறை பரபரப்புடன் காணப் படுகிறது. 6 மணிக்குள் சந்திராயனை இடம் மாற்றும் பணி முழுமையாக முடிந்து விடும். அதன்பிறகு சுமார் 1மணி நேரம் கழித்தே சந்திராயன் எப்படி இயங்குகிறது என்பது தெரிய வரும்.

இந்த பணிகள் வெற்றிகரமாக முடிந்த தும் சந்திராயன் செயற்கை கோளில் உள்ள தகடுகள் தானாக சூரியனை நோக்கி விரியும். சூரிய ஒளி மூலம் அந்த தகடு தானாக மின்சாரத்தை தயாரித்து செயற்கை கோள் தங்கு தடையின்றி பணியாற்ற உதவி புரியும். இதையடுத்து சந்திராயனில் உள்ள 11 கருவிகளும் ஒன்றன்பின் ஒன்றாக செயல்பட தொடங்கும்.

அடுத்த தடவை நிலாவில் மனிதனை இறக்கி ஆய்வு நடத்த இந்தியா தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக எம்.ஐ.பி. னும் ஒரு சிறிய எந்திர கருவியை நிலாமீது மோத செய்ய உள்ளனர். அடுத்த வாரம் சனிக்கிழமை இந்த பணி நடைபெறும்.

சந்திராயனுக்குள் வைக் கப்பட்டுள்ள இந்த கருவி தானாக பிரிந்து சென்று நிலாவில் மோதி தரை இறங்கும். அப்போது எத்தகைய விளைவுகள் ஏற் படுகிறது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே ஆய்வு செய்வார்கள்.அதன் பிறகு நிலாவில் தண்ணீர் உள்ளதாப ஹிலீயம்-3 உள்ளிட்ட கனிம வளங்கள் நிலாவில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு உள் ளது என்பதை சந்திராயன் கண்டு பிடிக்கும்.

2 comments:

நா. கணேசன் said...

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருளை விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்

Anonymous said...

வணக்கம் நிரூபன்,
தமிழ்மணம் வலைத்திரட்டியில் இணைந்து கொண்டால் மேலும் பலரை உங்கள் வலைப்பூ சென்றடையும்.
http://www.tamilmanam.net/