உலகின் மிகப் பழைமையான பாறை கனடாவில் கண்டுபிடிப்பு

கனடாவின் ஹட்ஸன் பே கடற்கரையில் 4.28 பில்லியன் ஆண்டுகள் பழைமையான உலகின் மிகவும் ஆதிகாலப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆதிகால உயிரினங்கள் தொடர்பான சான்றுகளையும் இப்பாறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

"இப்பாறைகளில் மிகவும் விசேடத்துவம் பொருந்திய இரசாயன கையெழுத்தொன்று காணப்பட்டது.இது மிக பழைமையானதாகும். இத்தகைய பழைய கையெழுத்து உலகில் வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை." என மேற்படி கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் பங்கேற்ற மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்தின் பூகர்ப்பவியல் பேராசிரியர் டொன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இப்பாறையிலுள்ள இரசாயன சான்றுகளானது, உலகம் எவ்வாறு தோன்றியது, உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பன தொடர்பான பல மர்மங்களுக்கு தீர்வுகாண உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: