அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வாயில்...

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வாய்க் கிரகத்திற்கு மிகப் பெரிய விண்கல உபகரணமொன்றை அனுப்பத் உத்தேசித்துள்ளது. 1.8 பில்லியன் செலவான இந்த பாரிய ஆராய்ச்சி கூடத்துடன் சிறிய வட்டவடிவ ரோபோக்களையும் அக்கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 11 இறாத்தல் எடையுடைய இந்த பந்து வடிவ ரொபோக்களானது, சுமார் 62 மைல்களுக்கு உருண்டு சென்று பல்வேறு கோணங்களிலும் செவ்வாய்க்கிரகத்தைப் படம் பிடிக்கவுள்ளதுடன் செவ்வாயின் மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ரோபோவின் மேற்பரப்பில் உள்ள சூரிய சக்திப் பிறப்பாக்கிகள் மூலம் அதன் இயக்கத்திற்கு தேவையான சக்தி பெறப்படவுள்ளது. இந்த பந்து வடிவமான ரேபோக்களானது சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் போலன்றி செவ்வாயின் மேற்பரப்பில் தங்கு தடையின்றி அசைந்து திரிவதுடன் தூசு துணிக்கைகளின் பாதிப்புகளுக்கும் இலகுவில் உள்ளம்காத தன்மையைக் கொண்டிருக்கும் என நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிறை குறைந்த கதிர்ப்புகளால் தாக்கப்படாத கணனி செயற்பாட்டைக் கொண்ட இந்த ரோபோக்களில் நான்கை 6 மில்லியன் அமெரிக்க டொலரிலும் குறைந்த செலவில் உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: