இந்தியாவின் நிலவு நோக்கிய கனவு


இந்தியா நிலவை ஆராய்வதற்காக 'சந்திராயன்' என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அக்டோபர் 22 ஆம் தேதி அனுப்ப உள்ளது. இந்த விண்கலத்தில் ஆறு இந்திய உபகரணங்களும், அமெரிக்க உபகரணங்கள் இரண்டு உட்பட, ஆறு வெளிநாட்டு உபகரணங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு, உயர் தொழில்நுட்பத் துறைகளில் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. சில விடயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைத்தாலும், வேறு சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த பல அமைப்புகளை தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்த முரண்பட்ட உறவுகள் குறித்தும் ஆசியாவில் சீனாவும், ஜப்பானும் விண்வெளித் துறையில் கண்டு வரும் வெற்றிகள் காரணமாக இந்தியா நிலவுக்கு விண்கலனை செலுத்துகிறதா என்பது குறித்தும் இன்றைய பகுதி ஆராய்கிறது.

No comments: