விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு மாபெரும் ஆபத்து


அண்டவெளியில் சஞ்சரிக்கும் விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு பாரிய அபாயம் காத்திருப்பதாகவும், எனவே முழு உலகமும் ஒன்றிணைந்து அதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் விசேட கூட்டத்தின்போதே விஞ்ஞானிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமிக்கு அண்மையிலான வஸ்துகளின் விண்வெளி வெடிப்புகள் சபையைச் சேர்ந்த இவ் விஞ்ஞானிகள், இரு வருட தீவிர ஆராய்ச்சியையடுத்தே மேற்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.""பூமியை விண்கற்கள் அணுகும் பட்சத்தில் அது தொடர்பான அபாயத்தை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் தயாராக வேண்டும். எனவே நாம் இது சம்பந்தமான முயற்சிகளில் ஒரு நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்'' என மேற்படி சபை உறுப்பினரும் "அப்பலோ 9' விண்கல விண்வெளிவீரருமான ருஸ்தி ஸெவீக்கார்ட் கூறினார்.

மேற்படி அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் சர்வர·தச ரீதியான நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் போதிய அக்கறை இதுவரை செலுத்தப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார். எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமிக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய மேலும் பல விண்கற்கள் கண்டறியப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

5000 வருடங்களுக்கு முன் ஒரு பஸ் அளவிலான விண்கல்லொன்று அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் விழுந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் கடந்த சில வருடங்களில் கனடாவிலும் பெருவிலும் சிறிய அளவான விண்கற்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் சிபேரியாவின் காட்டுப் பகுதியில் விழுந்த விண்கல் மூலம் வெளிப்பட்ட சக்தியானது, ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்ட சக்தியிலும் 1000 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

65 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் விழுந்த பாரிய விண்கல்லால், டைனோஸர்களும் உலகின் ஏனைய 70 சதவீதமான உயிரினங்களும் அழிவடைந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

No comments: