இரத்தக்கறை படிந்த கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பிய எய்ட்ஸ் நோயாளி

அமெரிக்காவிலுள்ள எய்ட்ஸ் நோயாளி ஒருவர் தனது இரத்தத்தை ஒரு தாளில் படியவைத்து அதனை கடிதத்துடன் இணைத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் அந்தக் கடிதத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துமடல்,ஒரேஞ் நிறதூள், தனது புகைப்படம் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்பிவைத்திருந்தார். அந்த நபரை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எத்தியோப்பிய நாட்டைச்சேர்ந்த அகதி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின் போது, தான் எயிட்ஸ் நோயால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு உதவிட அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுபோன்றசெயலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இரத்தக்கறை படியவைக்க தனது ஒரு விரலையே பிளேற்றால் துண்டித்ததாகவும் அந்த நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் ஒபாமாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒபாமாவுக்கு ஏற்கனவே கொலைமிரட்டல் இருந்து வருகிறது. இதனால் அவருக்கு எந்த வழியிலும் அச்சுறுத்தல் வரலாம் எனக் கருதி அவருக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலையில், ஒபாமாவுக்கு வந்த கடிதத்துக்குள் இருந்த ஒரேஞ் நிறத்தூளினால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இரசாயன விஞ்ஞானிகளை வரவழைத்து அந்த தூளை சோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

No comments: