”கவிதை எழுதுவோமா ?” என யோசித்த படி உட்கார்ந்தேன்....!


கவிதை எழுதுவோமா....?
என யோசித்த படி உட்கார்ந்தேன்....!
எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதே
என்றொரு யோசனை.....!

வேறு தலைப்பில் எழுத ஆசைதான்
ஆனால் வேறு தலைபு தெரியவில்லை
தெரிந்து எழுத முடியவில்லை....!
ஏன் அப்படியொரு குழப்பம்....!

வீட்டில் பழைய சஞ்சிகைகளைப்
புரட்டிப் பார்த்தேன்....!
ஒன்றுமே தென்படவில்லை....!
என்ன செய்வதென்றும் புரியவில்லை....!

திடீரென்று ஒரு யோசனை
நூலகத்துக்கு போவோமா.....!
பிரபலம் பெரும் கவிஞர்கள்
விதமான கவிதை ஆக்கங்கள்....!
அடுக்கடுக்காய் இருந்தது....!

தேடலில் சில நிமிடங்கள்...
மெது மெதுவாய் ஓடின....!
பற்பல கவிஞர்கள் கூடவே....!
இடையில் எமது கவிப்பேரரசுடன்...!
சொல்லவா வேண்டும்...!

கவிப்பேரரசின் கவிதை என்றாலே....
ஒருவரும் தேவையில்லை....!
வாசிக்க தொடங்கினால் போதும்
ஒவ்வொரு வரியும் இனிக்கும்....

அவர் கவிதைகளில் ஒரு பயணம்.
முடிவில்லாத கற்பனை.......!
கவிஞரின் வரிகளே சிறந்தது....!
அதிலும் கவிப்பேரரசின் வைர வரிகளை
சொல்லவா வேண்டும்...!

காதலை பற்றி எழுதிய கவிஞர்....!
தூங்கிய காதலை எழுப்பி விட்டார்....!
இனி தூங்கவா முடியும்....!
அதில் ஒரு குறுந்தூக்கம்....!
வீடு திரும்பினேன்....!

வீட்டுக்கு வந்து யோசித்தேன்....!
ஒருகையில் பேனாவைத் திறந்தபடி
சும்மா யோசித்தாலும்......!
காதல் கவிதை தான் வருகிறது...!
என்ன செய்வது........!!!!






2 comments:

mjn said...

wow....... nice

AT said...
This comment has been removed by a blog administrator.