உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

கதிரவன் உதயமதில் தொலைதூரம் நோக்கினேன்
அவள் தோன்றினாள்......தொலைகாட்டி இல்லாமலே
சின்னஞ்சிறு புன்சிரிப்புடன் அழகாகத் தெர்ந்தாள்...!
அவள் வருகையில் கதிரவன் ஒளிவட்டமானான்....!
உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

மாலைப் பொழுதினிலே, திடீரென தோன்றினாள்... !
அதே சிறிய புன்னகை முகத்துடன்.......!
அவளின் சிரிப்பதில் கதிரவனே சிரித்தபடி மறைகிறான்...
நிலாவும் புன்முறுவலுடன் எட்டிப்பார்க்கிறான்...!

உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

எதிர்பாராத நேரத்தில் கடவுளைப்போல்

கண்முன்னே காட்சி தருகிறாள்
எதிர்பார்க்கும் நேரங்களில்.....!
காணாது போய்விடுகிறாள்.......!

உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

No comments: