`ககோவ்' என்ற பறவை பெர்முடா பெட்ரல்

`ககோவ்' என்ற பறவை பெர்முடா பெட்ரல் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இது பெர்முடா தீவுகளில் மட்டும் காணப்படுகிறது. இந்தப் பறவை இயற்கை ஆய்வாளர்களுடன் கடந்த 300 ஆண்டுகளாக `கண்ணாமூச்சி' விளையாடி வந்திருக்கிறது. இந்தப் பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று நினைக்கப்படும் போதெல்லாம் சில பறவைகள் கண்ணில் தென்படும்.

ஒரு காலத்தில் பெர்முடா தீவுகளில் மிக அதிகமாகக் காணப்பட்ட இப்பறவைகள், இங்கு குடியேறிய ஆங் கிலேயர்களுக்கு நல்ல உணவாகின. குறிப்பாக 17-ம் நூற்றாண்டில் இடையிடையே கடுமையான உணவுப் பற் றாக்குறை ஏற்பட்டபோது `ககோவ்' பறவையே முக்கிய உணவானது. அப்புறம் அப்பறவைகள் கண்ணில் படாமல் போக, அவை முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் கரு தப்பட்ட நிலையில் 1916-ம் ஆண்டு மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து மறுபடி காணாமல் போன அவை 1951-ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டன. அப்போது ஒரு தீவுத்திட்டில் 18 ஜோடி கள் மட்டும் இருந்தன. `டி.டி.டி.' என்ற பூச்சிக்கொல்லி மற்றும் வீட்டு விலங்குகள் பெர்முடா தீவில் அறிமுகப் படுத்தப்பட்டதன் விளைவாக `ககோவ்' பறவைகள் அழிந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

அடுத்து, பெர்முடாவின் வனக் கட்டுப்பாட்டு அலுவலர் டேவிட் விங்கேட் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். பெர்முடா தீவுக்கு வரும் வெப்பமண்டலப் பறவைகள் `ககோவ்' பற வைகளை அழித்து அவற்றின் கூடுகளை ஆக்கிரமிப்பதை அவர் அறிந்தார். எனவே `ககோவ்' பறவைகளின் கூடுகளை பெரிய வெப்பமண்டலப் பறவைகள் நெருங்காமல் தடை களை ஏற்படுத்தினார்.

அதன்விளைவாக, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் `ககோவ்' பறவைகளின் எண்ணிக்கை 126 ஜோடிகளாக அதிகரித்துள்ளது.

No comments: