அதிவேக ரயில், ஜப்பானில் புதிய சாதனை


      ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும். இந்த அதிவேக ரயில் வண்டி அந்த 283 கிலோமீட்டர் தூரத்தை நாற்பது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும். தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் எண்ணியுள்ளது. 
      ஆனாலும் இந்தச் சாதனை வேகத்தை ரயில் பயணிகள் தமது பயணத்தில் அனுபவிக்க இயலாது என அந்த ரயில் வண்டி சேவையை நடத்தும் ஜப்பான் மத்திய ரயில்வே கூறியுள்ளது. ஏனெனில் மிக அதிகபட்சமாக மணிக்கு 505 கிலோ மீட்டர் வேகத்திலேயே தங்கள் அதை இயக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். டோக்யோவிலிருந்து நகோயா இடையேயான பயண தூரத்துக்கான கட்டுமான பணிகளுக்கு மட்டும் 100 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் 80 சதவீதம் பாதைகள் மிகவும் செலவு பிடிக்கும் சுரங்கப் பாதைகளாக அமையும் என்று ஏ ஃஎப் பி செய்தி நிறுவனம் கூறுகிறது. எதிர்வரும் 2045 ஆம் ஆண்டு இந்த வகையிலான அதிவேக மின்காந்தப் புலன் மூலம் ஓடும் ரயில்கள் டோக்யோவிலிருந்து ஒசாகா வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பயண நேரம் இப்போதுள்ள நேரத்தில் பாதியளவே இருக்கும்.
      உயர்சக்தி காந்தங்கள் மூலம் இயக்கப்படும் இந்த ரயில்கள் எந்த அளவுக்கு வேகமாக ஓடுகிறதோ, அந்த அளவுக்கு அது உறுதியாக இருக்கும் என்று அந்த ரயில்வேயின் தலைமை ஆய்வாளர் யசுகாசூ எண்டோ கூறுகிறார். இதன் மூலம் பயணத்தின் தரம் மேம்படும் எனவும் அவர் கூறுகிறார். ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ள வேளையில், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நியூயார்க் மற்றும் வாஷிங்டன் இடையேயான ரயில் பாதையை அமைக்க வழி செய்யும் ஜப்பானின் திட்டத்தை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நன்றி - பி.பி.சி. இணையம் - 

பரமாத்மாவின் கீதையின் சில துளிகள் !




நானே இந்த அகிலம்
அகிலத்தின் அனைத்து அணுவும் நானாவேன். சூரியனும் நானாவேன் குளிர் சந்திரனும் நானாவேன். நட்சத்திரங்களும் அனைத்து கிரகங்களும் நானே. ஒளிபொருந்திய சூரியனைவிட புராதனன். விருட்சத்தில் துளிர்க்கின்ற  தளிரைவிட புதுமையானவன். அனைத்து மானிடரும் நானாவேன். மேலும் சொர்க்கம் மற்றும் நரகத்தை ஆட்டுவிக்கும் சக்தியாவேன். கொடிய என்ணம் கொண்ட துரியனும் நான். வில்லேந்திய விஜயனும் நானே.
நான் அநேக ஜனனம் எடுத்தவன் பார்த்தா. பற்பல அவதாரங்களை நான் எனதாக்கியவன். எண்ணற்ற சரீரங்களை ஆடையாக்கி இந்த மண்ணில் புதைத்தவன் நான். இனியும் நான் மேலும் மேலும் ஜனனம் எடுப்பேன்.
தர்மம் அகிலத்தில் வீழும் போதெலாம், தர்மம் தன் பலத்தை இழக்கும் போதெல்லாம் சர்புருஷர்களை அகிலத்தில் தோற்றுவிப்பதற்காக அதர்மிகளை வேரறுப்பதற்காக தர்மத்தை ஸ்தாபிதம் செய்வதற்காக நான் புவியில் ஜனனம் எடுப்பேன். இந்நிகழ்வு ஒவ்வொரு யுகத்திலும் நடந்துள்ளது. இனிவரும் காலத்திலும் இந்த நிகழ்வு தொடரும். நானே அனைத்துமான பரமாத்மா.
மச்சாவதாரமும் நானே
வாமன அவதாரமும் நானே
பரசுராமரும் நானாவேன்
தசரத நந்தன் ராமரும் நானாவேன்
நானே பிரம்மா விஷ்ணு சர்வேஸ்வரன், அத்துடன் சரஸ்வதி காளி, மகாலக்ஷ்மியுமாவேன். நான் ஆண்மகனும் அல்ல, நான் ஸ்திரியும் அல்ல. இரண்டும் அல்லாதவனும் அல்ல. சரீரம் உற்றவன் நான், சரீரம் அற்றவன் நான். ஞானம் நான், சிருஷ்டியும் நான், ஆன்ம ஒளியும் நான். பரப்பிரம்மமும் நான். காணும் அனைத்தும் நான். எதுவுமற்ற சூட்ஷமமும் நான். பிறப்பற்றவன் நான். இறப்பற்றவன் நான். ஜகத்தில் வாழும் ஜீவன்கள் அனைத்தும் தலைவணங்கும் சிறப்புற்றவன் நான்.