Bit Box: ஒரு பாதுகாப்பான இணைய பிரவுசர்

எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இணையத்தில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பொக்ஸ்(BitBox). இது பயர்பொக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும்.

இன்றைய இணைய தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பது தான் அதிகமாக உள்ளது.

இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கணணியில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும் வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.

இந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கணணியின் ஓபரேட்டிங் சிஸ்டம் தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால் மால்வேர்கள், கணணியில் இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா! இப்படித்தான் பிட் பொக்ஸ் இயங்குகிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கணணியில் இது இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது இயங்குகிறது. பிட் பொக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் என்னும் புரோகிராமினைப் பயன்படுத்துகிறது.

இது ஒரு பாதுகாப்பான லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன் அடிப்படையில் இயங்குவதால், விண்டோஸ் இயங்கும் கணணியின் சிஸ்டம் மற்றும் கணணிக்குத் தொடர்பின்றி இணைய பிரவுசர் நடைபெறுகிறது.

“Browser in a box” என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு guest ஓபரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து நடவடிக்கைகளும் அடிப்படையான ஓபரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. கணணி பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும் ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதிக்கப்படமாட்டாது.

இந்த இரண்டு ஓபரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பொக்ஸ் இயக்கப்பட்ட பின்னர் விண்டோஸ் மூலம் எந்த ஒரு கோப்பையும் பதிவேற்றம் செய்திடவோ அல்லது இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்திடவோ முடியாது. இவை தடுக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி ஒவ்வொரு முறை பிட் பொக்ஸ் இயக்கப்படும் போதும் புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு இயங்குகிறது. இதனால் முந்தைய இணைய அனுபவத்தில் ஏதேனும் மால்வேர் இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

பிட் பொக்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது. Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும் இது இயங்குகிறது.

Download Link

பெரிய வியாழனில் தோன்றிய தேவநற்கருணை


நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். ஏனெனில் இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.

உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். கிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.

அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராவுணவை உட்கொண்டார். தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராவுணவு நடைபெறலாயிற்று.

இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகளான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே அலகை தூண்டியிருந்தது.

நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் நம் அண்ணன் - தம்பியோடு பேச்சுவார்த்தை இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களை அழைக்கும் போது அண்ணன் அல்லது தம்பி என்றுதான் அழைக்கின்றோம்.

ஆனால் நாம் பிறரோடு பேசாமல் இருந்தால் அவர்களை நண்பர்கள் என்று அழைப்பதில்லை அழைக்கவும் முடியாது. நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை நண்பர்கள் என்றே அழைக்கிறார். இந்த வார்த்தைக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா...?

பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய நாளும் இதுவே. குருக்களுக்கான ஆண்டாக இவ்வாண்டை நினைவுகூரும் நாம், குருக்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

உலகை வெறுத்து எமக்கு அப்பால் நான்கு சுவர்களுக்குள் பேசாமல் இருந்த காலம் போய் இன்று மக்கள் மத்தியில் பணிவிடை புரிய வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தப்படுகின்ற கால கட்டம்.

வேகமாக வளர்ந்து வரும் நுகர்வுக் கலாசாரமும் உலக மதிப்பீடுகளும் குருக்களை மட்டும் தாக்காது என்பதில் நியாயமில்லை. அவர்களும் மனிதர்கள், ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்கள். எனவே, தவறலாம் தவறுகளை களைந்து மீண்டும் புண்ணிய வாழ்வில் அடியெடுத்து வைக்க அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.

திருச்சபை என்ற மாபெரும் குடும்பத்தில் அவர்களும் உறுப்பினர்கள். நம் பிள்ளை தவறு செய்தால் நாலு பேருக்கு மத்தியில் விளம்பரப்படுத்தி அவர்களை கேவலப்படுத்துவோமா; நிச்சயம் இல்லை.

அதுபோல அவர்களையும் நினைத்து மன்றாடுவோம். பணிவிலும் மகிழ்ச்சியிலும் பணிபுரிய குருக்களும் முன்வர வேண்டும். நாமும் எமது பொதுக் குருத்துவ அழைத்தலை புரிந்து கொள்ள வேண்டும். இதையே பெரிய வியாழன் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.